தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட்டில் நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் - திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற திருச்சி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
முதலில் பேட் செய்த திருப்பூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 110 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் தினேஷ் 26 ரன்னும், கேப்டன் மொகமது 19 ரன்னும் எடுத்தனர்.
திருச்சி அணி சார்பில் பொய்யாமொழி 3 விக்கெட்டும், சரவண் குமார் 2 விக்கெட்டும் எடுத்தனர்.
இதையடுத்து, 111 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் திருச்சி அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அமித் சாத்விக், முகுந்த் தலா 4 ரன்கள் எடுத்து அவுட்டாகினர். மொகமது அட்னன் கான் 9 ரன்னில் வெளியேறினார்.
நிதிஷ் ராஜகோபால், ஆதித்யா கணேஷ் ஜோடி பொறுப்புடன் ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது.
இறுதியில், திருச்சி அணி 3 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. நிதிஷ் ராஜகோபால் 47 ரன்னும், ஆதித்யா கணேஷ் 43 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
உலகக்கிண்ண இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டித் தொடர
ஐபிஎல் சீசன் 15 வது சீசன் மார்ச் 26ம் தேதி தொடங்குகிறது. ம
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டா
கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன
டெஸ்ட் கிரிக்கெட்டின் 145 ஆண்டுகால வரலாற்றில் ஒரு வித்த
வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் இடையிலான இரண்டாவது டெஸ்ட்
தென் ஆப்பிரிக்கா அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து
அலங்காநல்லூரில் நடந்த ஜல்லிக்கட்டின் போது, நண்பரின் க
2022 ஐபிஎல் தொடரில் மீண்டும் கோப்பை வெல்வதற்கான ஆயத்த பண
16-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி வி
32-வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில
மகளிர் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று
இந்திய டெஸ்ட் அணிக்கு கேப்டனாக இருந்த விராட் கோலியா
ஆர்சிபி-யின் புதிய கேப்டன் குறித்து அணி நிர்வாகம் இறு
வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் இடையிலான இரண்டாவது டெஸ்ட்