மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீதமும், பொருளாதாரத்தில் நலிந்தவர்களுக்கு 10 சதவீதமும் இட ஒதுக்கீட்டை இந்த கல்வி ஆண்டு முதலே அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அரசின் இந்த நடவடிக்கையை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வரவேற்றுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், ‘இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளில் அனைத்திந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதவீதமும், பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்களுக்கு 10 சதவீதமும் இந்த ஆண்டே இடஒதுக்கீடு வழங்கும் வரலாற்று சிறப்பு மிக்க முடிவை எடுத்ததற்காக பிரதமர் மோடியை பாராட்டுகிறேன்’ என்று குறிப்பிட்டு உள்ளார்.
இந்த நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றியிருப்பதன் மூலம் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்களின் நலன்கள் மீதான மத்திய அரசின் உறுதிப்பாட்டை பிரதமர் வெளிப்படுத்தி இருப்பதாகவும் அவர் புகழாரம் சூட்டியிருந்தார்.
கடந்த 5 ஆண்டுகளில் பாதுகாப்பு தளவாடங்கள் ஏற்றுமதி 334 சத
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் பாராலிம
குஜராத் மாநிலம் சூரத்தில் இன்று உலகளாவிய படிதார் வணிக
கரூர் மாவட்டத்தில் ஆயிரத்து 72 அரசு மற்றும் தனியார் பள்
இந்தியாவிலேயே முதன் முதலில் 146 ஆண்டுகளுக்கு முன்னர் தூ
இந்தியாவின் 29 ஆவது சர்வதேச விமான நிலையமான குஷிநகர் சர்
பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 14 ஆம் திகதி சென்னை வர
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக கர்நாடகா மாநிலத்தை சே
மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு – கர்நாடகா இடையே
