மாகாணங்களுக்கு இடையில் தற்போது அமுலாகியுள்ள பயணக்கட்டுப்பாடுகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் தளர்த்தப்படுமாயின் அன்றிலிருந்து பொதுப்போக்குவரத்து சேவைகள் வழமைபோல் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இதனைத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறெனில் பொதுப்போக்குவரத்தினை வழமைக்கு கொண்டுவர முடியும். அதேநேரம், சகல அரச சேவையாளர்களும், வழமைபோல் பணிகளுக்கு திரும்பவுள்ளதால், நெரிசல் நிலையை குறைப்பதற்கு பொதுப்போக்குவரத்தை வழமை போல இயங்க செய்ய வேண்டிய தேவையுள்ளது.
அந்தவகையில், சுகாதார நடைமுறைகளுடன் பொதுப்போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையை மீட்பதற்கா
ஹட்டன் – டிக்கோயா இன்ஜெஸ்ட்ரி தோட்டத்தில் உயிருடன்
நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகாலச்
யாழ்ப்பாணத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று
நீண்டகாலமாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் விடுதலைப்
பாண் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலைகளை க
தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் பெரிய
நாட்டில் தற்போது நாளாந்தம் சுமார் 30 – 40 சுகாதார ஊழியர
இலங்கையின் கடனை மறுசீரமைப்பதில் கடன் வழங்கும் நாடாக அ
நாட்டில் தற்போதுள்ள அரசியல் அமைப்பில் மாற்றத்தை ஏற்ப
இலங்கை முழுவதும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்
தாதியர்கள் யாழில் அடையாள கவனயீர்ப்புப் போரா
பிரபல பின்னணி பாடகர் யேசுதாஸின் மகன் விஜய் யேசுதாஸ் வ
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசைக் கவிழ்ப்பத
திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச செயலக பிரிவ
