குமரி மாவட்டம் அழகப்பபுரத்தில் உள்ள ஒரு கடையில் ஆமை ஓடுகள், மான் கொம்பு மற்றும் யானை தந்தத்தால் செய்யப்பட்ட கலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மத்திய வன உயிரின குற்ற தடுப்பு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மத்திய வன உயிரின குற்ற தடுப்பு பிரிவு அதிகாரிகள் நேற்று குமரி மாவட்ட வனத்துறையினருடன் இணைந்து அழகப்பபுரத்துக்கு சென்று சம்பந்தப்பட்ட கடையில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது கடையில் ஆமை ஓடுகள், மான் கொம்பு, அரிய வகை சங்கு, கடல் விசிறி, முள்ளம்பன்றி உடலில் இருக்கும் முட்களால் செய்யப்பட்ட கலை பொருட்கள், மற்றும் யானை தந்தந்தால் செய்யப்பட்ட அரிய பொருட்கள் இருந்தது தெரியவந்தது. அவை அரசால் விற்பனைக்கு தடை செய்யப்பட்ட பொருட்கள் ஆகும்.
இந்த பொருட்களை வெளி மாவட்டங்களில் இருந்து வாங்கி வந்து பல லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து கடையில் இருந்த பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் கடை நடத்தி வந்த நெல்லை மாவட்டம் ரஜகிருஷ்ணாபுரம் அரசடி தெருவை சேர்ந்த சங்கர், ஆன்றோ போரஸ் மற்றும் கன்னியாகுமரி ஜோசப் டவுனை சேர்ந்த சாம்ராஜ் ஆகிய 3 பேரையும் பிடித்து நாகர்கோவிலில் உள்ள மாவட்ட வனத்துறை அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர்.
இப்போது தான் அமித் ஷா காஷ்மீர் அறிவிப்பை அறிவிக்க வேண
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை தொடர்ந்து ஆசி
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்த மாத இறுதியில் இலங்க
பஞ்சாப்பில் ஆட்சியை பிடிக்க ஆம் ஆத்மி போன்ற எதிர்க்கட
பிரச்சாரத்தில் பழக்க தோஷத்தில் தங்க தமிழ்ச்செல்வம் இ
குஜராத் மாநிலம் வதோதரா நகரில் மத்திய சிறைச்சாலை உள்ளத
வங்க கடலின் கிழக்கு பகுதியில் உருவான குறைந்த காற்றழுத
தமிழ்நாட்டில் 234 சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த மாதம் 6-
இந்தியாவில் தற்கொலை படை தாக்குதல் நடத்தப்படும் என அ
உலகின் ஒன்பது நாடுகளுக்கு 60 இலட்சம் ‘டோஸ்’ கொரோனா த
நாடுமுழுவதும் வருகிற 15-ந் தேதி சுதந்திர தின கொண்டாட்டம
தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழையினால் ஏற்பட்ட பாத
இந்தியாவில் 82.63 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத
இலங்கையுடனான கடல் எல்லைக்கு அருகில் உள்ள பாக்கு நீரிண
15 நாடுகளுக்கு இந்திய கொரோனா தடுப்பூசி ஏற்கனவே ஏற்றுமத
