கேபினட் மந்திரிக்கு இணையான அந்தஸ்து வழங்கியதன் மூலம் முன்னாள் முதல் மந்திரி எடியூரப்பாவுக்கு அரசு பங்களா, கார் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் கிடைக்கும் நிலை ஏற்பட்டது. மேலும் அவர் தற்போது தங்கியுள்ள காவேரி பங்களாவில் தொடர்ந்து தங்கவும் வாய்ப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், தனக்கு கேபினட் மந்திரி அந்தஸ்து வேண்டாம் என்று கூறி முதல்மந்திரி பசவராஜ் பொம்மைக்கு எடியூரப்பா கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது
கர்நாடக அரசு நேற்று முன்தினம் ஒரு உத்தரவை பிறப்பித்து முன்னாள் முதல் மந்திரியான எனக்கு கேபினட் மந்திரி அந்தஸ்து வழங்குவதாக தெரிவித்துள்ளது. மந்திரிக்கு கிடைக்கும் அனைத்து சலுகைகளும் வழங்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. முன்னாள் முதல் மந்திரிக்கு அரசு சார்பில் வழங்கப்படும் சலுகைகள் மட்டும் வழங்கினால் போதும். அதனால் கேபினட் மந்திரி அந்தஸ்து உத்தரவை வாபஸ் பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
கடல் மார்க்கமாக தமிழ்நாட்டிற்கும் பின்னர் மங்களூருவ
சமையல் சிலிண்டர் விலை மாதந்தோறும் உயர்ந்து வரும் நிலை
பயிர் காப்பீட்டு திட்டம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோ
நாடாளுமன்றத்தில் விவசாயிகள் பிரச்சினையைப் பற்றி விவ
சென்னை பெசன்ட்நகரில் வசித்து வருபவர்
இமாசல பிரதேச முதல் மந்திரி ஜெய்ராம் தாக்குர் நேற்று த பெங்களூருவில் வடமாநிலத்தை சேர்ந்த ஒரு தொழிலாளி தனது ம கொரோனா வைரஸ் பாதிப்பால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்க திருச்சி மாவட்டம் கல்லணையில் முதலமைச்சர்
நாடு முழுவதும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு தஞ்சாவூர் பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளை பொது ஏலம் ஜல்லிக்கட்டு போட்டியில் வாடிவாசலில் சீறி பாய திருச்ச சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு உதவ வேண்டும் எனவும் த தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் ச மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாள் இன
