கொவிட் கட்டுப்படுத்தல் தொடர்பாக ரணில் தெரிவித்த கருத்தை விளங்கிக்கொள்ளாமலேயே இராணுவ தளபதி பேசி இருக்கின்றார். அவரின் கருத்து சிறுபிள்ளைத்தனமானது இது தொடர்பில் கவலையடைகின்றோம் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், இராணு தளபதி சவேந்திர சில்வாவின் சிறுபிள்ளைத்தனமான பேச்சு தொடர்பில் கவலையடைகின்றோம். ஏனெனில் தலைவர் ரணில் விக்ரமசிங்க இராணுவ தளபதி தொடர்பாகவோ இராணுவத்தினரின் நடவடிக்கைகள் தொடர்பாகவோ விமர்சிக்கவில்லை. அதேபோன்று தடுப்பூசி ஏற்றுவது தொடர்பாகவோ தடுப்பூசி ஏற்றும் இடம் தொடர்பாகவோ கதைக்கவில்லை. இதனை புரிந்துகொள்ளாமலேயே இராணுவ தளபதி இவ்வாறு செயற்பட்டிருக்கின்றார்.
அத்துடன் சுகாதார சட்டத்துக்கமைய யாரேனும் ஒருவர் தடுப்பூசி எந்த இடத்தில் பெற்றுக்கொண்டார் என அறிவிப்பு செய்ய யாருக்கும் எந்த உரிமையும் இல்லை. அது நோயாளரின் உரிமையாகும். அதனால் இந்தளவு சிறுபிள்ளைத்தனமான அறிவிப்பொன்றை தெரிவிக்கும் நிலைமைக்கு இராணுவ தளபதி சென்றமை தொடர்பில் நாங்கள் கவலையடைகின்றோம் என்றார்.
சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்லவுடன் இடம்பெற்ற
கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பா
ராஜபக்சக்களுக்களுக்கு எதிரான எதிர்க்காற்று நாட்டில்
சர்வதேச நீர் தினமான இன்று சுற்றாடல் பாதுகாப்பின் முக்
இந்த வார இறுதிக்குள் இலங்கையில் டீசல் தட்டுப்பாடு முட
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் சமர்ப்ப
இலங்கையில் பிரதான தொலைக்காட்சி செய்திகளில் தலைப்புச
தொழில் நிமித்தம் சீஷெல்ஸ் (seashells) நாட்டிற்கு சென்று, கொரோ
இலங்கையில் தீவிரவாத தாக்குதல்கள் நடக்கலாம் என இங்கில
வைத்தியசாலைகளுக்காக முன்பதிவு செய்யப்பட்ட மருந்துகள
சீன தூதரகத்தின் அதிகாரி ஒருவர் தமிழர்களின் கலாசார உடை
யாழ்.பருத்துறை துன்னாலை - குடவத்தை பகுதியில் உள்ள கோ
தனிப்பட்ட தேவைக்காக வெளிநாடு சென்றிருந்த தொழிலாளர் த
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயம் மற்றும் சுகாதாரப்
உண்மைச் செய்திகளை மக்களிடம் கொண்டுசென்று சேர்ப்பது ம
