போதுமானளவு குளிர்பதன் வெப்பநிலை இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட 2000 கிலோகிராம் கோழி இறைச்சி நேற்று எரித்தழிக்கப்பட்டதாக வவுனியா தெற்கு பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.
வடபகுதியில் விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட குறித்த இறைச்சி ஏற்றிய வாகனத்தினை வவுனியா ஈரற்பெரியகுளம் பகுதியில் நேற்று (06)
சோதனைக்குட்படுத்திய வவுனியா தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை, பொது சுகாதார பரிசோதகர்கள் குறித்த வாகனத்தில் போதியளவு குளிரூட்டி இன்மையால் இறைச்சி பழுதடைந்த நிலையில் காணப்பட்டதையடுத்து அவற்றை கைப்பற்றி நீதிமன்றத்தில் குறித்த பொருட்களை ஒப்படைத்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட 2000 கிலோகிராம் கோழி இறைச்சியை வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த பின்னர், குறித்த இறைச்சி பாவனைக்கு உதவாது என நீதிமன்றத்தினால் உறுதிபடுத்தப்பட்டதனையடுத்து சுகாதார பரிசோதகர்களால் நேற்றையதினம் மாலை வவுனியா பாவற்குளம் மக்கள் குடிமனைகள் இல்லாத பகுதியில் உள்ள பொது இடத்தில் கோழி இறைச்சி தீ வைத்து எரித்தழிக்கப்பட்டது.
வவுனியா தெற்கு பொது சுகாதார பரிசோதகர்கள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்



அரசாங்கம் ஏழைகளின் கண்ணீரில் சவாரி செய்கிறது என தமிழ்
நாட்டில் கொரோனா தொற்று இன்னும் கட்டுப்பாட்டை மீறவில்
தனிமைப்படுத்தல் தொடர்பான நடவடிக்கைகள் தொடர்ந்தும் ம
யால வன சரணாலயத்தில் அரியவகை கருஞ்சிறுத்தை ஒன்றை சுற்ற
நாட்டில் தற்போது நிலவுகின்ற பொருளாதார நெருக்கடிகளால
இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்டு அண்மையில் கரைக்கு க
யாழ். அச்சுவேலி பகுதியில் உள்ள பிள்ளையார் ஆலயத்தில் இ
கொழும்பு - மிரிஹான பெங்கிரிவத்தை வீதியில் உள்ள ஜனாதிப
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக் கறிகளின்
நாட்டில் தற்போது நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார நெ
தமிழ்த் தேசியப்பரப்பில் உள்ள அரசியல் கட்சிகளை ஒன்றிண
அரசியலமைப்பின் உத்தேச 22 வது திருத்தம் தொடர்பாக நாடாளு
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமைப்பு இலங்கையின் தேசிய
அரச இரகசியச் சட்டத்தின் கீழ் உயர் பாதுகாப்பு வலயங்களா
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து அமைப்பாளர்கள
