சென்னை சத்தியமுர்த்தி பவனில் உள்ள 150 அடி உயர கோடி கம்பத்தில் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று தேசிய கோடி ஏற்றி வைத்தார்.
அப்போது, சத்தியமூர்த்தி பவன் முகப்பில் அமைக்கப்பட்டிருந்த காந்தியின் கைராட்டையை திறந்துவைத்தார் கே. எஸ். அழகிரி. இதில் நடிகர் சிவகுமார் பங்கேற்றார். சேவாதள தொண்டர்கள் அணியும் வெள்ளை குல்லாவை அணிந்து நடிகர் சிவகுமார் அந்த நிகழ்வில் பங்கேற்றார் . நிகழ்வில், கே.எஸ்.அழகிரிக்கு காந்தி பற்றிய புத்தகம் ஒன்றினையும் அளித்தார் சிவகுமார்.
முன்னதாக மரைந்த ஞானதேசிகன் தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்தபோது சத்தியமூர்த்தி பவனில் நடந்த கண்ணதாசன் பிறந்தநாள் விழாவில் சிறப்பு அழைப்பாளராக சிவகுமார் பங்கேற்றிருந்தார்.
தற்போது காந்தியின் கைராட்டை திறப்பு விழாவிலும் சிவகுமார் பங்கேற்று இருப்பதால் , சிவகுமார் தன்னை காங்கிரஸ் அனுதாபியாக காட்டி கொண்டிருப்பதாக அக்கட்சியினர் கருதுகின்றனர். மேலும் ராகுல் காந்தி முன்னிலையில் அவர் விரைவில் காங்கிரஸ் இணைவார் என்ற எதிர்பார்ப்பும் அக்கட்சியினர் மத்தியில் எழுந்திருக்கிறது.


தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு,
தாம்பரம் சானடோரியத்தில் உள்ள அரசு நெஞ்ச நோய் மருத்துவ
தமிழக அரசு பணியில் இருந்து ஐ.ஏ.எஸ். அதிகாரி உ.சகாயம் கடந
ஜி.எஸ்.டி. (சரக்கு மற்றும் சேவை வரி) கவுன்சில் கூட்டம் 3 ம
உக்ரைனில் 3000 இந்திய மாணவர்களை உக்ரைன் ராணுவம் சிறை ப
போலந்து நாட்டில் நடந்த உலக இளையோர் வில்வித்தை சாம்பிய
கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி
தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக க
வெளிநாடுகளில் தலைமறைவாக இருந்த அவர், கடந்த 2015-ம் ஆண்டு
வருகிற சட்டமன்ற பொதுத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம், ச
தமிழக சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் பலத்த பாத
இலங்கை அரசை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல
