தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை மாற்றியமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது
தமிழகத்தில் 1,964 பேருக்கு நேற்று ஒரேநாளில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25லட்சத்து 91 ஆயிரத்து 94ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரேநாளில் 28பேர் உயிரிழந்த நிலையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34ஆயிரத்து 395 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் குறைந்து வரும் கொரோனா தொற்றைக் கருத்தில் கொண்டு, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், கொரோனா சிகிச்சைக்கான கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அரசாணையை வெளியிட்டுள்ளது.
அதில், தனியார் மருத்துவமனைகளில் பொதுமக்களுக்கான கொரோனா சிகிச்சை கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. தீவிரமில்லாத ஆக்சிஜன் அல்லாத படுக்கை வசதிக்கு ரூ.3,000 கட்டணமாக நிர்ணயிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. தீவிரமில்லாத ஆக்சிஜனுடன் கூடிய படுக்கை வசதிக்கு ரூ.7,000 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் வென்டிலேட்டருடன் கூடிய தீவிர சிகிச்சைக்கு ரூ.15,000 கட்டணம் செய்யப்பட்டுள்ளது.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை
குமரி மாவட்டம் அழகப்பபுரத்தில் உள்ள ஒரு கடையில் ஆமை ஓ
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 40,000-ஐ கடந்தது.
மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில
தமிழகத்தில்
நீலகிரி மாவட்டம், கொடைக்கானல், ஏற்காடு போன்ற அனைத்த சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓரிரு நாட்களே உள்ள நிலைய தமிழக பாஜகவின் மாநிலத் தலைவராக கே.அண்ணாமலை நியமிக்கப் சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கொரோனா தடுப இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து இன்று மத இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழ அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக கர்நாடகா மாநிலத்தை சே தமிழில் எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை கூட்டணி என தேமு உத்தர பிரதேச மாநிலம் குஷி மாவட்டத்தில் உள்ள நௌரங்கி
