நிவாரணம் அடிப்படையில் வழங்குவதற்கு சதொச நிறுவனத்துக்கு கொண்டுவரப்பட்ட 2000 மெட்ரிக்தொன் சீனி முறைகேடாக வியாபாரிகளுக்கு விநியோகிக்கப்பட்டிருக்கின்றது.
இதனுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக தராதரம் பார்க்காமல் கடுமையான நடவடிக்கை எடுப்போம் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
நாட்டின் தொற்று நிலைமை காரணமாக மக்கள் பொருளாதார நிலையில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதனால் அவர்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் சதொச நிறுவனம் ஊடாக அத்தியாவசிய பொருட்களை நிவாரண விலையில் விநியோகித்து வருகின்றோம்.
அதன் பிரகாரம் மக்களுக்கு நிவாரணமாக வழங்குவதற்கு சதொச நிறுவனத்துக்கு கொண்டுவரப்பட்ட 3500 மெட்ரிக்தொன் சீனியில் 2000 மெட்ரிக்தொன் காணாமல் போயிருக்கின்றது.
இந்த சீனி தொகையை வியாபாரிகளுக்கு முறைகேடாக வழங்குவதற்கு ஒருசில சதொச முகாமையாளர்கள் சம்பந்தப்பட்டிருக்கின்றார்கள். அவர்களை இடை நிறுத்துமாறு அறிவித்திருக்கின்றோம். இவர்கள் மோசடியில் ஈடுபட்டமை உறுதிப்படுத்தப்பட்டால், அவர்கள் யாராக இருந்தாலும் தராதரம் பார்க்காமல் அவர்களுக்கு எதிராக அதிகூடிய தண்டனையை பெற்றுக்கொடுப்பேன் என்றும் அமைச்சர் கூறினார்.
கொழும்பில் உள்ள அடுக்கு மாடி கட்டிடத்தில் இருந்து குத
நிலக்கரியை ஏற்றிய சரக்கு கப்பல் ஒன்று இலங்கையை வந்தடை
பாதுகாப்பு அதிகாரிகள் இருவரை தாக்கிய குற்றச்சாட்டின
எரிபொருள் விலை சீர்திருத்தத்தை அடுத்து அகில இலங்கை மு
நாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்த
எமது பூர்வீகம் இல்லாது ஒழிக்கப்படும் சூழ்நிலை இந்த நா
புத்த பெருமானின் பிறப்பு, ஞானம்பெறுதல், பரிநிர்வாணமடை
மினுவாங்கொடையில் இன்று காலை 7 மணியளவில் இடம்பெற்ற துப
பொரளையில் அமைந்துள்ள பிரபல மலர்ச்சாலையொன்றின் உரிமை
ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனகா தடுப்பூசிகளை பிரித்தானியா
வாகனங்களுக்கான கேள்வி குறைந்துள்ளதால் சந்தையில் வாக
இலங்கையில் இடம் பெற்ற யுத்த காலத்தில் சர்வதேசத்தால் த
உலகப் பொருளாதாரத்தில் எமது வர்த்தக பங்கை அதிகரிக்க உத
கிழக்கு முனையை இந்தியாவிற்கு வழங்குவது தொடர்பாக பல்வ
கொழும்பு மாவட்டத்தில் இதுவரையில் தடுப்பூசி பெற்றுக்
