நிவாரணம் அடிப்படையில் வழங்குவதற்கு சதொச நிறுவனத்துக்கு கொண்டுவரப்பட்ட 2000 மெட்ரிக்தொன் சீனி முறைகேடாக வியாபாரிகளுக்கு விநியோகிக்கப்பட்டிருக்கின்றது.
இதனுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக தராதரம் பார்க்காமல் கடுமையான நடவடிக்கை எடுப்போம் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
நாட்டின் தொற்று நிலைமை காரணமாக மக்கள் பொருளாதார நிலையில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதனால் அவர்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் சதொச நிறுவனம் ஊடாக அத்தியாவசிய பொருட்களை நிவாரண விலையில் விநியோகித்து வருகின்றோம்.
அதன் பிரகாரம் மக்களுக்கு நிவாரணமாக வழங்குவதற்கு சதொச நிறுவனத்துக்கு கொண்டுவரப்பட்ட 3500 மெட்ரிக்தொன் சீனியில் 2000 மெட்ரிக்தொன் காணாமல் போயிருக்கின்றது.
இந்த சீனி தொகையை வியாபாரிகளுக்கு முறைகேடாக வழங்குவதற்கு ஒருசில சதொச முகாமையாளர்கள் சம்பந்தப்பட்டிருக்கின்றார்கள். அவர்களை இடை நிறுத்துமாறு அறிவித்திருக்கின்றோம். இவர்கள் மோசடியில் ஈடுபட்டமை உறுதிப்படுத்தப்பட்டால், அவர்கள் யாராக இருந்தாலும் தராதரம் பார்க்காமல் அவர்களுக்கு எதிராக அதிகூடிய தண்டனையை பெற்றுக்கொடுப்பேன் என்றும் அமைச்சர் கூறினார்.
நாட்டில் தற்போது அத்தியாவசிய பொருட்கள் உட்பட மக்களின
1,000 ரூபாய் சம்பளத்தை முழுமையாக அனுபவிக்க முடியாத அவல நி
இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு அமெரிக்கா தொடர்ந
இராணுவத்தால் நடத்தப்படும் 'புனர்வாழ்வு' மையங்களில
ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் விலையை 250 ரூபாயால் குற
72ஆவது இந்திய குடியரசு தினத்தினை முன்னிட்டு யாழிலுள்ள
முல்லைத்தீவு களமுறிப்பு வனப்பகுதியில் யானை ஒன்றைக் க
சுகாதாரத்துறை சார்ந்த தொழிற்சங்கங்கள் முன்னெடுக்கும
மனவெழுச்சி ஈர்ப்புப் பருமன் ( Emotional Gravity) ஒருவரின் வாழும் ச
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் வீட்டில், வேலைக்கு
சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்லவுடன் இடம்பெற்ற
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா பி ரெப்லிற்ஸ் அம
திருமதி இலங்கை அழகி பட்டம் வென்ற புஷ்பிகா டி சில்வா, தம
மின்சாரம், எரிபொருள் விநியோகம் மற்றும் அதுசார்ந்த அனை
யாழ்ப்பாணம் கடற்பரப்பரப்பிற்குள் அத்துமீறி கடற்றொழி
