தமிழில் ஒரு சில படங்களில் நடித்துள்ள நடிகை மீரா மிதுன், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரபலமானார். சமூக வலைதளங்களில் அடிக்கடி சர்ச்சை கருத்துக்களை வெளியிட்டு வரும் இவர், சமீபத்தில் பட்டியல் இனத்தவர்களைப் பற்றியும், சினிமாவில் பணியாற்றும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த இயக்குனர்கள் பற்றியும் இழிவான கருத்துகளை தெரிவித்து யூடியூபில் வீடியோ பதிவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து மீரா மிதுன் மீது புகார் அளிக்கப்பட்டு, 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் கேரளாவில் சில தினங்களுக்கு முன்பு மீரா மிதுனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், மீரா மிதுன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருக்கிறார். அதில், பல படங்களில் நடிப்பதற்கு கால்ஷீட் கொடுத்துள்ள நிலையில் தன்னை சிறையில் அடைத்துள்ளதால் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தன்னை பற்றி அவதூறு செய்தி பரப்பியதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பேசிய போது வாய் தவறி பட்டியலின சமூகத்தினர் பற்றி அவதூறாக பேசிவிட்டேன் என மனுவில் கூறியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

வசனம் பேசி சிரிக்கவைக்கும் வைக்கும் காமெடியன்களுக்க
நடிகை சமந்தா ரசிகர்கள் அதிகம் ரசிக்கும் ஒரு பிரபலம். அ
நடிகர் ஆதி நான் சிரித்தால் படத்தைத் தொடர்ந்து அடுத்தத
த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோ
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை
கமலின் 'விக்ரம்' திரைப்படம் எப்படி உருவாகவுள்ளது
அட்டக்கத்தி படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ச
நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மொழி
நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து
பொன்னியின் செல்வன்’ அடுத்தக்கட்ட படப்பிடிப்பை தற்ப
தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேக
பிரபல ஹாலிவுட் பாடகி கேகே வியாட் 11வது முறையாக கர்ப்பமட
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான 'வலிம
நயன்தாரா தமிழ் படங்களில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாள
லோகேஷ் கனகராஜ் – விஜய் கூட்டணியில் வெளியான மாஸ்டர் த
