ஆளுநர் பன்வாரிவால் புரோஹித்தை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரும் இன்று சந்தித்து பேசவுள்ளனர்
கோடநாடு விவகாரத்தில் நீதிமன்ற அனுமதியுடன் மீண்டும் விசாரணை தொடங்கியுள்ளது. இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு உள்ளதாக இந்த வழக்கின் முக்கிய குற்றவாளி சயான் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக சட்டப்பேரவையில் இருந்து நேற்று அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். அத்துடன் இந்த விவகாரம் குறித்து கலைவாணர் அரங்கில் அதிமுகவினர் தர்ணாவில் ஈடுபட்டனர். இதுகுறித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, கோடநாடு வழக்கு முடியும் தருவாயில் உள்ளது.ஆனால் திட்டமிட்டு திமுக அரசு பொய் வழக்கு போட திட்டமிட்டுள்ளது என்று தெரிவித்தார்.
இந்நிலையில் கோடநாடு கொலை விவகாரத்தில் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரை அதிமுக இன்று புறக்கணிக்கிறது . அத்துடன் ஆளுநரை சந்தித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முறையிட திட்டம் வகுத்துள்ளனர். இன்று காலை 11 மணிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரும் சந்தித்து கோடநாடு விவகாரம் குறித்து மனு அளிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் தமிழ
ஆட்கொல்லி கொரோனாவை ஒழிப்பதற்காக பல்வேறு உலக நாடுகளைப
காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளரும், சோனியா காந்தி மகளும
தேசிய விருது பெற்ற இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் தற்போது செ
தேசப்பிதா மகாத்மா காந்தியின் 153-வது பிறந்தநாள் விழா இன
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கட்சி தலைமைக்கு எதிர
உக்ரைனில் இருந்து தனது வளர்ப்பு நாய்களுடன் தமிழகத்தி
கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்
ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ
தமிழ்நாடு பா.ஜ.க.மாநில துணைத் தலைவராக இருந்த அண்ணாமலைய
வாட்ஸ்அப் நிறுவனம் சமீபத்தில் பயனர்களின் தனியுரிம
தேனி மாவட்டம் கூடலூரில் 16 வயது சிறுமியை கடத்திச்சென்ற
