ஒன்றிய அரசின் தேசிய பணமாக்குதல் திட்டத்தை கிண்டல் செய்யும் வகையில், `இந்தியா விற்பனைக்கு’ என்ற ஹேஷ்டேக் மூலம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் கிண்டலடித்துள்ளார். ஒன்றிய அரசின் சொத்துக்களை ஏலம் விட்டு நிதி திரட்டும் ஒன்றிய அரசின் தேசிய பணமாக்குதல் திட்டத்தின் மூலம், நாட்டின் சொத்துக்களை தனது பணக்கார முதலாளித்துவ நண்பர்களுக்கு மோடி தாரை வார்த்து வருவதாகவும், 70 ஆண்டுகளாக பிற கட்சிகள் சேர்த்த சொத்துக்களை 7 ஆண்டுகளில் மோடி அரசு விற்று வருவதாகவும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று முன்தினம் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், அவர் நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில், `எந்தவொரு அரசும் நாட்டின் இயற்கை வளத்தை எதிர்கால சந்ததிக்கு பயன்படும் வகையில் பெருக்க செய்வார்கள். ஆனால், மோடி அரசு அவருடைய முதலாளி நண்பர்கள் லாபம் அடையும் வகையில் மதிப்பு மிக்க நமது சொத்துக்களை அழித்து வருகிறார். முதலில் மனசாட்சியை விற்றார். தற்போது…,’ என்று கூறியுள்ளார். மேலும், ‘இந்தியா விற்பனைக்கு’ என்ற ஹேஷ்டேக்கையும் இணைத்துள்ளார்.
தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், சென்னை கோயம்
கிழக்கு லடாக்கில், கடந்த ஆண்டு மே மாதம் சீன ராணுவ வீரர்
பன்வாரிலால் புரோகித் அவர்களை மரியாதையுடன் வழியனுப்ப
இஸ்ரேலின் என்எஸ்ஓ அமைப்பின் பெகாசஸ் உளவு மென்பொருள் ம
பெங்களூரு மாநகராட்சி இணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள்
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 2 நா
ராமசாமி படையாச்சியாரின் 104-வது பிறந்தநாளை முன்னிட்டு ச
மத்திய அரசு 2016-ல் பிரான்சின் டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்
உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ண
தமிழகத்தில் ஜனவரியில் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பய
சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓரிரு நாட்களே உள்ள நிலைய
தமிழகத்தில் திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றுக் கொண்டத
அமெரிக்க டொலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரல