சொந்த வீடு வாங்க வேண்டும் என்பது பலருக்கும் வாழ்நாள் கனவாக உள்ளது. நமது நாட்டில் சொந்த வீடு வாங்கவேண்டும் என்றால் பல லட்சங்கள் தேவைப்படும்.
ஆனால் இத்தாலியில் வெறும் ரூ.87 க்கு ஒரு வீடு வாங்க முடியும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் அது உண்மைதான். இத்தாலியின் தலைநகர் ரோமில் இருந்து 70 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள மென்சா என்கிற நகரில் தான் ஒரு யூரோவுக்கு ( இந்திய மதிப்பில் ரூ.87 ) வீடுகள் விற்பனை செய்யப்படுகிறது.
1968-ம் ஆண்டு பெலிஸ் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட நிலநடுக்கத்துக்கு பின் மக்கள் மென்சோ நகரில் இருந்து வெளியேற தொடங்கினர். இதனால் மென்சோ நகரத்தின் மக்கள் தொகை கணிசமாக குறைந்தது. இதையடுத்து முன்பு போலவே இந்த நகரில் மீண்டும் மக்கள் அதிக அளவில் குடியேற வேண்டும் என்ற முயற்சியில், அரசால் குறைந்த விலையில் வீடுகள் விற்பனை செய்யப்படுகின்றன.
இதுகுறித்து அந்நகரின் மேயர் கிளாடியோ ஸ்பெர்டி கூறுகையில் ‘‘வீடுகளின் விற்பனைக்கான விண்ணப்பங்கள் 28-ந் தேதியுடன் முடிவடையும். தற்போது ஒரு சில வீடுகள் மட்டுமே விற்பனைக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. அதிக வீடுகள் விரைவில் கிடைக்கும். நகரில் இருக்கும் கைவிடப்பட்ட அல்லது காலியான டஜன் கணக்கான வீடுகள் எதிர்காலத்தில் விற்பனைக்கு வைக்கப்படும்’’ என கூறினார்.
பிரான்ஸ் பாராளுமன்ற தேர்தலின் முதல் கட்டம் கடந்த 10-ம்
ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவால்னியை விடுதலை செ
போட்டி நிறுவனங்களை அழிக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்
அபுதாபி தடுப்பூசி மையத்தின் இயக்குனர் டாக்டர் கோசி ஜா
எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்காக 4 ரஷ்ய நிறுவனங்களுக்
சமீபத்திய ப்ளூம்பெர்க் கொவிட்-19 பின்னடைவு தரவரிசைப்ப
அமெரிக்காவின் மத்திய புளோரிடாவில் உள்ள பொழுதுபோக்கு
உலகிலேயே சக்திவாய்ந்த அரச குடும்பங்களில் ஒன்றான இங்க
மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவில் ஒரே நாள் இரவில் மழையும்,
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை
கொரோனா வைரஸுக்கு எதிராக மக்கள் தடுப்பூசி போடப்பட்டிர
திருமண முகூர்த்தத்திற்கு மணமகன் வர தாமதமானதால் மணமகள
உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேஸ
ரஷியாவுடனான போரில் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு ம
தென் ஆப்ரிக்காவில் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா கைது
