ஆப்கானிஸ்தானில் உள்ள தமது பிரஜைகளுக்கு, அமெரிக்காவும், பிரித்தானியாவும் பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்துள்ளன.
பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக, காபூல் விமான நிலையத்தைவிட்டு வெளியேறுமாறு, குறித்த இரு நாடுகளும் தமது பிரஜைகளை வலியுறுத்தியுள்ளன.
ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறுவதற்காக காபூல் விமான நிலையத்திற்கு உள்ளேயும், வெளியேயும் ஆயிரக்காணக்கான மக்கள் காத்திருக்கின்ற நிலையில், நேற்று இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
தலிபான்கள் அதிகாரத்தைக் கைப்பற்றியதன் பின்னர், கடந்த 10 நாட்களில் 82 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காபூலில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் பொதுமக்களை வெளியேற்றுவதற்கு நாடுகள் முயற்சித்து வருவதாக குறிப்பிடப்படுகின்றது.
அமெரிக்க போர் விமானங்களில் சீன கொடிகளை பறக்கவிட்டு ரஷ
வெளிநாட்டினர்கள் சீனாவுக்கு வருவதைக் கட்டுப்படுத்த,
ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா க
ரஷ்யாவுக்கு எதிரான போரில் இறுதி வரை போராடுவோம் என உக்
கொரோனாத் தொற்றின் நெருக்கடிக்கு மத்தியிலும் போர்த்த
செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் இருந்ததா என்பது பற்ற
சிலியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
காசா நகர் மீதான தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் தீவிரப்படுத
ஜெர்மனியில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட முதியவர்
யாருடைய கண்ணுக்கும் தெரியாதபடி முற்றிலும் கண்ணாடியா
