ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றி உள்ளனர். முக்கிய நகரங்களைக் கைப்பற்றிய நிலையில் அவர்கள் ஆட்சி அமைக்க மும்முரம் காட்டி வருகின்றனர். இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.
குறிப்பாக, காபூல் விமான நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. கூட்டத்தை சமாளிக்க முடியாமல் அமெரிக்காவும் பிற நாடுகளும் திணறி வருகின்றன.
இந்நிலையில், ஆப்கன் தலைநகர் காபூலில் இருந்து நேற்று புறப்பட்ட அமெரிக்காவின் சி-17 விமானத்தில் ஆப்கன் நாட்டைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி ஒருவரும் சென்றுள்ளார். திடீரென நடுவானிலேயே அந்தப் பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
இதையறிந்த விமானி காற்றழுத்தத்தை சீராக்க விமானத்தை தாழ்வாக பறக்கச் செய்து அப்பெண்ணின் உயிரைக் காப்பாற்றினார். அப்பெண்ணிற்கு டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் பிரசவம் பார்த்தனர். இதில் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.
உடனடியாக அந்த விமானம் ஜெர்மனியில் தரையிறக்கப்பட்டது. விமானம் தரை இறங்கியதும் தாயையும், சேயையும் அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர்.
உக்ரைன் போரின்போது உக்ரைன் வான்வெளியை தமது கட்டுப்பா
இந்தோனேஷியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் நேற்றிரவு இ
"மனித உரிமைகள் மீதும், மனிதநேயத்தின் மீதும் தாக்குதல
லண்டனில் இப்போது கோடைகாலம் என்பதால், மக்கள் நீச்சல் க
உக்ரைன் - ரஷ்யா இடையே இடம்பெறும் போரை நிறுத்த ரஷ்யா முன
இந்தியாவில் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி
அமெரிக்கா - வட கொரியா இடையே மோதல் போக்கு இருந்து வருகிற
கோர்ட்டு அனுமதித்த போதும், நவாஸ் ஷெரீப் சகோதரரான பாகி
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஞாயிற்றுக்கிழமை ராணுவ கர்னல
ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சிக்கு எதிராக ஐ.எஸ்.
போலந்து எல்லைக்கு அருகில் உள்ள இராணுவ தளம் மீது ரஷ்யா
அமெரிக்காவின் பல மாகாணங்களை புரட்டிப்போட்டு வரும் இட
உக்ரைன் நகரங்களில் தொடர்ந்து வான் தாக்குதலை ரஷ்ய துரு
உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான போர் தொடர்ந்து 13