தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துக்கு நாளை (புதன்கிழமை) பிறந்தநாள் ஆகும். இதையொட்டி அவர், தே.மு.தி.க.வினருக்கு வேண்டுகோள் விடுத்து நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
2005-ம் ஆண்டு தே.மு.தி.க. தொடங்கப்பட்ட பின்னர் 2006-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் எனது பிறந்தநாளை வறுமை ஒழிப்பு தினமாக கடைப்பிடித்து வருகிறோம். ‘இயன்றதை செய்வோம், இல்லாதவர்க்கே’ என்ற கொள்கை முழக்கத்தோடு தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் மக்களுக்கான பல உதவிகளை செய்து வருகிறோம்.
தமிழகத்தை அச்சுறுத்தி வரும் கொரோனா பரவல் தற்போதுதான் குறைந்து வரும் நிலையில், பெருங்கூட்டம் கூடினால் தொற்று மேலும் பரவும் அபாயம் உள்ளது. எனவே அனைவரின் நலன் கருதி எனது பிறந்தநாளன்று தொண்டர்கள் யாரும் தன்னை நேரில் சந்திக்க வர வேண்டாம்.
கூட்டம் கூடுவதைத் தவிர்க்கும் வகையில் அவரவர் இருக்கும் இடத்திலேயே தங்களால் இயன்ற உதவிகளை ஏழை-எளிய மக்களுக்கு செய்து பிறந்தநாளைக் கொண்டாடுங்கள். மேலும் உடல்நல பரிசோதனைக்காக விரைவில் வெளிநாடு செல்ல இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்
கல்வி உரிமை தான் பெண்களின் உரிமை எனவும், பெண்கள் தன்னம தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. தனிப்பெரும் பான்மையுட கேரள மாநிலம் கொச்சியில் தென்பிராந்திய கடற்படை கட்டளை மதுரையில் இன்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நிருப கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலையை வீழ்த்துவதற்காக நாடு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தனியார் வெடிமருந்து வ ‛உக்ரைனில் இருந்து வெளியேற இந்தியர்களுக்கு மத்திய அர முதல்-மந்திரி
கர்நாடக மாநில புதிய முதல் மந்திரி பசவராஜ் பொம்மை நேற் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழ நிலுவையிலுள்ள சான்றிதழ்களை தாமதமின்றி வழங்க வேண்டும மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாம கோவையில் பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப பாராலிம்பிக் உயரம் தாண்டுத
