தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துக்கு நாளை (புதன்கிழமை) பிறந்தநாள் ஆகும். இதையொட்டி அவர், தே.மு.தி.க.வினருக்கு வேண்டுகோள் விடுத்து நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
2005-ம் ஆண்டு தே.மு.தி.க. தொடங்கப்பட்ட பின்னர் 2006-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் எனது பிறந்தநாளை வறுமை ஒழிப்பு தினமாக கடைப்பிடித்து வருகிறோம். ‘இயன்றதை செய்வோம், இல்லாதவர்க்கே’ என்ற கொள்கை முழக்கத்தோடு தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் மக்களுக்கான பல உதவிகளை செய்து வருகிறோம்.
தமிழகத்தை அச்சுறுத்தி வரும் கொரோனா பரவல் தற்போதுதான் குறைந்து வரும் நிலையில், பெருங்கூட்டம் கூடினால் தொற்று மேலும் பரவும் அபாயம் உள்ளது. எனவே அனைவரின் நலன் கருதி எனது பிறந்தநாளன்று தொண்டர்கள் யாரும் தன்னை நேரில் சந்திக்க வர வேண்டாம்.
கூட்டம் கூடுவதைத் தவிர்க்கும் வகையில் அவரவர் இருக்கும் இடத்திலேயே தங்களால் இயன்ற உதவிகளை ஏழை-எளிய மக்களுக்கு செய்து பிறந்தநாளைக் கொண்டாடுங்கள். மேலும் உடல்நல பரிசோதனைக்காக விரைவில் வெளிநாடு செல்ல இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில் நிறைய புகார்கள்
கொரோனாவின் 2-வது அலையில் இருந்து பாதுகாத்துக்கொள்ள வங
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே இந்த ஆண்டு
டெல்லியில் ரேசன் பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்கு
இந்தியாவில், ஆற்றங்கரையில் தன் நண்பர்களுடன் விளையாடி
நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப
துபாய் எக்ஸ்போவில் பங்கேற்க அரசு முறை பயணமாக சென்னையி
பஞ்சாபில், பிரதமர் மோடியின் பாதுகாப்பில் ஏற்பட்ட குளற
கொரோனா பரவலால் மிகுந்த பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில்,
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் டுவிட
போர்க்கால அடிப்படையில் மாநில அரசுகளுக்கு ஆக்சிஜன் சி
பிரதமர் மோடி நேற்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள எய
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரேசன் அட்டை
குவாட் மற்றும் ஐநா மாநாட்டில் பங்கேற்க 4 நாள் சுற்றுப்
இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்களின் மருத்துவ சிக
