வவுனியா மாவட்டத்தில் 60 வயதிற்கு மேற்பட்ட 5 ஆயிரத்து 800 பேருக்கு இராணுவத்துடன் இணைந்து வீடு வீடாகச் சென்று தடுப்பூசி வழங்கப்பட வேண்டியுள்ளது என பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் எம்.மகேந்திரன் தெரிவித்தார்.
வவுனியா மாவட்டத்தில் தடுப்பூசி ஏற்றும் செயற்பாடு குறித்து கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
வவுனியாவில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இறப்பு அதிகமாக இருப்பதால் அவர்களுக்கு முன்னுரிமை அளித்து வருகின்றோம். வவுனியா மாவட்டத்தில் 60 வயதிற்கு மேற்பட்ட 27 ஆயிரம் பேர் உள்ளனர். அதில் 5800 பேருக்கு இன்னும் தடுப்பூசி வழங்க வேண்டியுள்ளது. அவர்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்காக இராணுவத்துடன் இணைந்து வீடு வீடாக சென்று தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த வாரம் முழுவதும் அந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும். 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு முழுமையாக தடுப்பூசி வழங்கி அவர்களை இறப்பு மற்றும் நோய் தொற்றில் இருந்து காப்பதே எமது நோக்கம் எனவும் தெரிவித்தார்.
மேல் மாகாணத்தை விட்டு வெளியேறுவோருக்கு எழுமாறாக பரிச
இலங்கையில் விரைவில் முகக் கவசமின்றி நிகழ்வு நடத்துவத
ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் குருநாகல் மாவட்ட நாடாளு
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் தங்குமிடம் ஒன்றில் இடம்பெ
மன்னார் மாவட்டச் செயலகத்தின் 2022 ஆண்டுக்கான வாணிவிழா ந
நடைபெற்றுக்கொண்டிருக்கும் அரசாங்கத்திற்கு எதிரான தொ
காற்றை விதைப்பவர்கள் தவிர்க்க முடியாமல் சூறாவளியை அற
நிதியமைச்சர் பதவியை வகிப்பது எனக்கு இலகுவானதாக இருக்
கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்
கதிர்காமம் - தம்பே வீதியில்
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நில யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி பேருந்தில் வர இலங்கையில் தற்போது கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட நாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்த ஆறு வருடம் கஷ்டப் பிரதேசங்களில் சேவையாற்றிய ஆசிரியர்
