More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • தமிழகத்தில் 10-ந்தேதி மீண்டும் ஒரு மெகா தடுப்பூசி முகாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
தமிழகத்தில் 10-ந்தேதி மீண்டும் ஒரு மெகா தடுப்பூசி முகாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
Sep 29
தமிழகத்தில் 10-ந்தேதி மீண்டும் ஒரு மெகா தடுப்பூசி முகாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழக கூட்டரங்கில் நேற்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:



தமிழகத்தில் மக்களைத் தேடி மருத்துவம் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று நாள்தோறும் 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் பயனாளிகளைக் கண்டறிந்து, அவர்களின் வீடுகளுக்கே சென்று மருத்துவ சேவை அளிக்கப்பட்டு வருகிறது.



கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் கடந்த 2011-ம் ஆண்டுக்கு பின்னர் சரியாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. இந்த நிலையில் நாளை (இன்று) சேலம் மாவட்டம் வாழப்பாடி பேரூராட்சி அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் மீண்டும் தொடங்கி வைக்கப்பட உள்ளது.



இந்த திட்டத்தின் மூலம் தமிழகத்தில் ஆண்டுக்கு 1,240 மருத்துவ முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த மருத்துவ முகாம்களில் குழந்தை நலம், மகப்பேறு, இருதய நோய் உள்ளிட்ட 16 சிறப்பு மருத்துவர்களால் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சிறப்பான சிகிச்சைகள் அளிக்க உயர் ஆஸ்பத்திரிகளுக்கு பரிந்துரைசெய்யப்பட இருக்கின்றன.



தொடர்ந்து மூன்று வாரங்களாக நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாம்கள் மிகச்சிறப்பாக நிர்ணயிக்கப்பட்ட இலக்கைவிட கூடுதலான வகையில் தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளன. காந்தி ஜெயந்தி அன்று கிராமசபை கூட்டங்கள் நடைபெற உள்ளதால், வரும் ஞாயிற்றுக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடைபெறாது.



தொடர்ந்து அக்டோபர் 10-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தமிழகத்தில் 50 ஆயிரம் இடங்களில் பெரிய அளவிலான 4-வது மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி நிர்வாக ஊழியர்கள் கொசு ஒழிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.



தமிழகத்தில் மக்களைத் தேடி மருத்துவ திட்டத்துக்கு, நிதிநிலை அறிவிப்பில் 4 ஆயிரத்து 800 செவிலியர்களை நியமிப்பதாக அறிவித்து உள்ளோம். கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு முன்னுரிமை கொடுத்து, அவர்களை நியமிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.



அம்மா மினி கிளினிக் தற்போது அவசியம் இல்லை. விளம்பரத்திற்காக ஆரம்பிக்கப்பட்டவைதான் அவை. அம்மா உப்பு, அம்மா காய்கறிகள் அங்காடி, அம்மா கூட்டுறவு அங்காடியில் மருந்து மாத்திரைகள், அம்மா அங்காடியில் அரிசி என்றெல்லாம் ஆரம்பித்தார்கள். ஆனால் அவை ஆரம்பித்ததோடு சரி. இப்போதும் எங்கும் அவைகள் இயங்கவில்லை.

 



இவ்வாறு அவர் கூறினார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr01

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக

Mar05

மேற்கு வங்காள மாநிலத்தில் 294 தொகுதிகளுக்கு சட்டசபைக்க

Mar13

இலங்கையின் வடக்கு கிழக்கில் இந்தியாவின் பொருளாதார ஆத

Jan17

அகமதாபாத் மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்டம் மற்றும் சூரத

Apr28

பல மாநிலங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து

Jun12

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள தனது அலுவலகத்த

Jan14

சென்னை மாவட்டத்திலுள்ள வண்ணாரப்பேட்டை பெரியபாளையத்த

Dec27

மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த இந்து மத தலைவர் காளிச்

Aug06

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே இந்த ஆண்டு

Oct25

சென்னை இன்று நிகழும் சூரிய கிரகணம் பல உலக நாடுகளில் தெ

Feb04

மக்கள் பிரதிநிதிகளுக்கு தடுப்பூசி போட மத்திய அரசு அனு

Dec22

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், வயநாடு எம்.பி.யுமா

May01

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வர

Jan17

காஷ்மீரில் நாசவேலைகளை அரங்கேற்றி வந்த பயங்கரவாதிகளை

Jan20

கொரோனா நோய்த் தொற்று காரணமாக 2020-ம் ஆண்டுக்கான நீட் மற்ற

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 18 (22:24 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 18 (22:24 pm )
Testing centres