ஐ.பி.எல். 2021 கிரிக்கெட் லீக்கின் 2-வது பாதி ஆட்டங்கள் கடந்த மாதம் 19-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதுவரை 50 லீக் ஆட்டங்கள் முடிவடைந்துள்ளன.
டெல்லி கேப்பிடல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் தலா 13 போட்டிகளில் விளையாடியுள்ளன. மற்ற 4 அணிகளும் தலா 12 போட்டிகளில் விளையாடியுள்ளன.
இதில் டெல்லி கேப்பிடல்ஸ் 10 போட்டிகளில் வெற்றி பெற்று 20 புள்ளிகளுடன் முதல் இடத்தைப் பிடித்து பிளே ஆஃப்ஸ் சுற்றில் நுழைந்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் 9-ல் வெற்றி பெற்று 18 புள்ளிகளுடன் 2-வது இடத்தைப் பிடித்து பிளே ஆஃப்ஸ் சுற்றை உறுதி செய்துள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 8 வெற்றிகளுடன் 16 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தைப் பிடித்து பிளே ஆஃப்ஸ் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
கொல்கத்தா நைட்ரைடர்ஸ் 6 வெற்றிகளுடன் 4-வது இடத்திலும், பஞ்சாப் கிங்ஸ் 5 வெற்றிகளுடன் 5-வது இடத்திலும் உள்ளன. ராஜஸ்தான் ராயல்ஸ் 5 வெற்றிகளுடன் 6-வது இடத்திலும், மும்பை இந்தியன்ஸ் 5 வெற்றிகளுடன் 7-வது இடத்திலும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் 2 வெற்றியுடன் கடைசி இடத்திலும் உள்ளன.
இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி இரு அணிகளுக்கும் மிகமிக முக்கியமானது. இதில் வெற்றி பெறும் அணி பிளே-ஆஃப்ஸ் சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ளும்.

இருபதுக்கு இருபது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதல
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரி
32-வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட
ஐ.பி.எல். ரி-20 தொடரின் ஏழாவது லீக் போட்டியில், ராஜஸ்தான்
சென்னை சூப்பர் கிங்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது லீக் ஆட்டம் இ
மோட்டோ ஜிபி பந்தயத்தின் கிரான் பிரீமியோ அனிமோகா பிராண
மகளிர் உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வீ
15-வது ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ர
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக ஷம்மி சில்
பாகிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான
ஒன்பதாவது கரீபியன் பிரீமியர் லீக் ரி-20 தொடரின் சம்பியன
பெண்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் வீராங்கனைகளின் புதிய
அந்த வகையில் நடப்பு சாம்பியனான சென்னை அணி, மீண்டும் தங
