மத்திய கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஜோர்டானில் அரசியலமைப்பில் சீர்திருத்தங்களை கொண்டு வர அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக விவாதிப்பதற்காக அந்த நாட்டு பாராளுமன்றம் கூடியது. எம்.பி.க்களின் காரசார விவாதம் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டு வந்தது.
அப்போது பாலின சமத்துவம் குறித்த அரசியலமைப்பு சீர்திருத்தத்துக்கு எம்.பி. ஒருவர் எதிர்ப்பு தெரிவித்து பேசியதால் அவையில் அமளி ஏற்பட்டது. இதனால் சபாநாயகர் அந்த எம்.பி.யை அவையில் இருந்து வெளியேறுமாறு கூறினார்.
ஆனால் அந்த எம்.பி. அதை ஏற்க மறுத்ததோடு மட்டுமில்லாமல், சபாநாயகரை தாக்க முயன்றார். இதையடுத்து சபாநாயகருக்கு ஆதரவான எம்.பி.க்கள் அவரை தடுக்க முயன்றபோது கை கலப்பு உருவானது. இதை தொடர்ந்து இருதரப்பு எம்.பி.க்கள் ஒருவரையொருவர் தாக்கி கொண்டதால் அவையில் பதற்றம் உருவானது. இதனால் அவை ஒத்திவைக்கப்பட்டது.
இதனிடையே பாராளுமன்றத்தில் எம்.பி.க்கள் ஒருவரையொருவர் தாக்கி கொள்ளும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இங்கிலாந்து நாட்டில் ஜூலை மாதம் 19-ம் தேதி முதல் ஊரடங்க
உக்ரைன் மீதான போரினை ரஷ்யா கைவிட வேண்டுமென போப் பிரான
உலக அளவில்
ஆஸ்திரேலியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமாக நியூ சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா மத்திய பாக்தாத்தில் ஒரு வணிக வீதியில் ஏற்பட்ட இரட்டை ரஷ்யாவுடனான போரில் இதுவரை 1300 உக்ரைன் வீரர்கள் உயிரிழந தாய்வானின் தென்கிழக்கு கடற்கரையில் ஏற்பட்ட 6.9 ரிக்டர் உக்ரைன் தலைநகர் கிவ்வுக்கும் மிக அருகாமையில் ரஷ்ய துர அமெரிக்காவில் அண்மை காலமாக துப்பாக்கிச்சூடு சம்பவங் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் பேட்டி அளி நான் உக்ரைனின் அதிபர். 2 குழந்தைகளுக்கு தந்தையாக இருக் உக்ரைனின் மரியுபோலில் இரும்பு ஆலைக்குள் தஞ்சமடைந்தி அமெரிக்கா சென்றுள்ள இந்திய பிரதமர் மோடி இந்திய நேரப்ப ஆப்கானிஸ்தான் நாட்டின் கிழக்கே அமைந்த லோகர் மாகாணத்த
