உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கிறிஸ்துமஸ் நாளில் இருந்து புத்தாண்டு வரை அமெரிக்கா மற்றும் பல நாடுகளில் மிப்பெரிய அளவில் விடுமுறையாக கொண்டாடப்படும். இந்த விடுமுறையில் மக்கள் சுற்றுலா சென்று மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பார்கள். வெளியூர்களுக்கு செல்வதால் விமான சேவை எப்போதும் பரபரப்பாக காணப்படும்.
ஆனால், அமெரிக்காவில் தற்போது கடுங்குளிர் நிலவி வருகிறது. அதேபோல் ஒமைக்ரான் வைரஸ் தொற்றும் அசுர வேகத்தில் பரவி வருகிறது. விமான ஊழியர்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருவதால் விமான சேவைகளை ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதன்படி நேற்றுமுன்தினம் (டிசம்பர் 31-ந்தேதி) அமெரிக்காவில் 2,604 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. உலகளவில் 4,529 விமாங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் மட்டும் 50 சதவீதத்திற்கு மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
நேற்று 3, 447 உள்நாட்டு விமானங்கள் வந்தடைவதிலும், புறப்படுவதிலும் தாமதம் ஏற்பட்டது. உலகளில் 7602 விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. இதனால் புத்தாண்டு கொண்டாட செல்ல இருந்தவர்களும், புத்தாண்டு கொண்டாட்டம் முடிந்து சொந்த ஊர் திரும்ப இருந்தவர்களும் கடும் அவதிக்குள்ளானார்கள்.
விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் விமான நிலையங்களில் முடங்கிய பயணிகள் லேப் டாப், செல்போன் மூலம் நேரத்தை செலவழிக்கும் நிலை ஏற்பட்டது.

ரஷ்யா, உக்ரைன் மீது தடை செய்யப்பட்ட தெர்மோபரிக் எனப்ப
உக்ரைனின் போரோடியங்கா நகரில் ரஷ்ய படைகள் நடத்திய தாக்
துப்பாக்கி கலாசாரத்துக்கு எ
உலக அளவில் கொரோனா தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உ
பிரான்ஸ் நாட்டின் மத்திய-வலது குடியரசு கட்சியின் எம்.
ஜம்மு காஷ்மீரின் பண்டிபோரா மாவட்டத்தில் மருந்துக்கட
சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைர
மலேசியாவில் அடுத்த மாதம் 19ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத
மியான்மர் நாட்டில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ம் தேதி முதல்
உக்ரைன் - மரியுபோலில் ஏறக்குறைய 2,000 அசோவ்ஸ்டல் பாதுகாவல
உலகின் மிகப்பெரிய ஏவுகணை சோதனை என உலக நாடுகளை நம்ப வைத
அரபிக்கடலில் இந்தியா-பாகிஸ்தான் எல்லை பகுதியான சர் கி
ஐரோப்பிய நாடுகள், கனடா உள்ளிட்ட 36 நாடுகள் தங்களது வான்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகம் கொரோனா
தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில்,இலங்கைக்கான பயணத
