More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • காபூல் ஏர்போர்ட்டை மீண்டும் தாக்க பயங்கரவாதிகள் திட்டம் -கார் வெடிகுண்டை சரியான நேரத்தில் அழித்தது அமெரிக்கா
காபூல் ஏர்போர்ட்டை மீண்டும் தாக்க பயங்கரவாதிகள் திட்டம் -கார் வெடிகுண்டை சரியான நேரத்தில் அழித்தது அமெரிக்கா
Aug 30
காபூல் ஏர்போர்ட்டை மீண்டும் தாக்க பயங்கரவாதிகள் திட்டம் -கார் வெடிகுண்டை சரியான நேரத்தில் அழித்தது அமெரிக்கா

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை தொடர்ந்து அந்நாட்டில் இருந்து வெளிநாட்டவர்களும், தலிபான்களுக்கு பயந்து ஆப்கானியர்களும் வெளியேறியவண்ணம் உள்ளனர். அவர்கள் காபூல் விமான நிலையத்தில் இருந்து அழைத்துச் செல்லப்படுகின்றனர். 



அந்த விமான நிலையத்தை குறிவைத்து ஐ.எஸ். பயங்கரவாதிகள் சமீபத்தில் தாக்குதல் நடத்தினர். விமான நிலைய நுழைவு வாயிலில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் கோரசன் பிரிவு பயங்கரவாதியால் நடத்தப்பட்ட இந்த தற்கொலைப்படை தாக்குதலில் 13 அமெரிக்க வீரர்கள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலை பல்வேறு நாடுகள் கண்டித்துள்ளன.



இந்த பரபரப்பு அடங்குவதற்குள் காபூல் நகரில் இன்று மீண்டும் குண்டு வெடித்த சத்தம் கேட்டது.  ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், ஒரு வீடு சேதமடைந்ததாகவும் முதற்கட்ட தகவல் வெளியானது. இதனால் மக்கள் பீதி அடைந்தனர். 



 



காபூல் விமான நிலையத்தைக் குறிவைத்து மற்றொரு பயங்கரவாத தாக்குதல் நடைபெறலாம் என அமெரிக்கா எச்சரித்திருந்ததால், இது பயங்கரவாதிகளின் தாக்குதலாக இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. ஆனால், இந்த தாக்குதலை நடத்தியது அமெரிக்கா என்பது தெரியவந்துள்ளது.



 



காபூல் விமான நிலையத்தை நோக்கி வெடிகுண்டுகளுடன் புறப்படவிருந்த ஒரு கார் மீது ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் அந்த கார் வெடித்து சிதறியதுடன், அதில் இருந்த வெடிகுண்டுகளும் பயங்கர சத்தத்துடன் வெடித்தன. இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை எழுந்தது. தாக்குதலால் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்த தகவல் வெளியாகவில்லை. ஆனால், சிலர் உயிரிழந்திருக்கலாம் என உள்ளூர் ஊடகத்தில் செய்தி வெளியானது. பாதிப்பு குறித்து அமெரிக்கா கணக்கெடுத்துவருகிறது.



இந்த தாக்குதலை தலிபான் செய்தித் தொடர்பாளரும் உறுதி செயதுள்ளார். விமான நிலையத்திற்கு புறப்படவிருந்த கார் குண்டு அழிக்கப்பட்டதாகவும், ட்ரோன் மூலம் வீசப்பட்ட இரண்டாவது குண்டு அருகில் உள்ள வீட்டில் விழுந்ததாகவும் தலிபான் அமைப்பு கூறி உளள்து.



விமான நிலைய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தின் இரண்டு முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar12

நான் உக்ரைனின் அதிபர். 2 குழந்தைகளுக்கு தந்தையாக இருக்

Apr12

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான ராணுவ மற்றும் வெளி

Jul01

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் தேசிய வைர

May18

நியூ பிரவுன்ஸ்வீக்கில் பாடசாலை பஸ் ஒன்றும் கார் ஒன்று

May18

13 வருடங்களுக்கு பின்னர் இலங்கை மீண்டும் இரத்தம் பார்த

Feb28

காஷ்மீர் எல்லையில் இந்தியா-பாகிஸ்தான் இடையே கடந்த 2003-ம

Nov06

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா

Feb27

நைஜீரியா நாட்டில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் ஆதிக்கம் உ

Apr04

ரஷ்யாவில் கடந்த 2012-ம் ஆண்டு சமூக வலைதளங்களில் சர்ச்சைக

Mar08

உக்ரைன் - ரஷ்யா இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில், தல

Feb07


துபாய் சுகாதார ஆணையத்தின் ஆரம்ப சுகாதார நிலைய தலைம

Jul29

உலக அளவில்  கொரோனா 2-வது அலை கட்டுக்குள் வந்து கொண்டு

Mar12

  உக்ரைன் மீதான போர் இரண்டு வாரங்கள் கடந்தும் போர் தொ

Feb04

சமீபத்திய ப்ளூம்பெர்க் கொவிட்-19 பின்னடைவு தரவரிசைப்ப

Jul10

உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் 150-வது நாளை நெருங்க

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 16 (07:37 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 16 (07:37 am )
Testing centres