உடுமலை அருகே கொல்லப்பட்ட ஆண் யானையின் தந்தத்தை நேற்று வனத்துறை அதிகாரிகள் மீட்டனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரட்டூரில், கடந்த சில நாட்களுக்கு முன்பு 35 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று இறந்த நிலையில் நிலையில் கிடந்துள்ளது. இதுகுறித்து அந்த பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், யானைக்கு கால்நடை மருத்துவர்கள் உடற்கூறு ஆய்வு மேற்கொண்டதில், யானையை மர்மநபர்கள் கொன்று அதன் தந்தத்தை திருடிச்சென்றது தெரியவந்தது.
இதனை அடுத்து, கோவையில் இருந்து வரவழைத்த வனத்துறை மோப்பநாய் மற்றும் டிரோன் கேமரா மூலம் வனப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த நிலையில், நேற்று வனத்துறையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் கரட்டூர் பகுதியில் உள்ள பாலத்தின் இடுக்கில் பதுக்கி வைத்திருந்த தந்தம் மீட்கப்பட்டது. இந்த தேடுதல் வேட்டையில் ஆனைமலை புலிகள் காப்பக உதவி இயக்குநர் கணேஷ் ராம் மற்றும் உடுமலை வனச்சரகர் தனபாலன் உள்ளிட்டோர் ஈடுபட்டனர். மேலும், தந்தத்தை திருடிய நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ராமஜென்பூமி வழக்கில் உச்சநீதிமன்ற அளித்த தீா்ப்பின்
உத்தர பிரதேச மாநிலத்தில் இந்த ஆண்டு சட்டசபைத் தேர்தல்
மும்பையில் 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி பாகிஸ்தான் பயங்
தமிழக விளையாட்டு வீரர்கள் 15 பேருக்கு ரூ.3.98 கோடி ஊக்கத்த
சென்னையில் உள்ள அம்மா உணவகங்களுக்கு கடந்த 2021-2022-ம் ஆண்ட
இந்தியாவில் கடந்த டிசம்பர் 2-ம் வாரத்தில் இருந்து இதுவ
பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தமிழகம் மற்றும் புதுச்சே
இந்திய விமான நிறுவனங்கள் இயக்கும் விமானங்களில் இந்தி
உலகின் ஒன்பது நாடுகளுக்கு 60 இலட்சம் ‘டோஸ்’ கொரோனா த
சென்னை மெரினாவில் நடமாடும் மருத்துவ வாகன சேவை திட்டத்
தமிழகத்துக்கு ரூ.12 ஆயிரத்து 400 கோடி மதிப்பிலான புதிய தி
திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தில் கிராமப்புற க
தேசிய விருது பெற்ற இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் தற்போது செ
பொங்கல் பண்டிகையையொட்டி மது விற்பனை அதிகளவில் இருக்க
