நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து நகரில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுக்குள் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர் நேற்று திடீரென நுழைந்தார். அவர் அங்கிருந்த சிலரை கத்தியால் சரமாரியாக குத்தினார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அவரை சுட்டு வீழ்த்தினர். விசாரணையில், அவர் காவல் துறையினரின் கண்காணிப்பு வளையத்தில் இருந்துவந்தது தற்போது தெரிய வந்துள்ளது.
இதுதொடர்பாக, நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டென் கூறுகையில், கடந்த 2011-ம் ஆண்டு இலங்கையைச் சேர்ந்த அந்த நபர் நியூசிலாந்து வந்தார். பயங்கரவாத கண்காணிப்பு பட்டியலில் அவர் இருந்துள்ளார். ஆக்லாந்து நகர்ப்புற பகுதியில் உள்ள ஷாப்பிங் மாலுக்குச் சென்ற அவர் அங்கிருந்து கத்தியை எடுத்து மக்களை சரமாரியாகத் தாக்கியுள்ளார்.
இதில், 6 பேர் படுகாயம் அடைந்துள்ளார். அவரை கண்காணித்து வந்த காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினர். காயம் அடைந்தவர்களில் 3 பேர் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. ஐஎஸ் இயக்கத்தால் கவரப்பட்ட அந்த நபர் இந்த வன்முறை செயலில் ஈடுபட்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் இன்டியானாபொலிஸில் உள்ள வீடொன்றில் கர்
உக்ரைன் மீது ரஷ்யா போரை தீவிரப்படுத்தியுள்ள நிலையில்
துருக்கியில் உள்ள கருங்கடல் பகுதியில் கடந்த புதன்கிழ
உக்ரைனில் மக்கள் தஞ்சமடைந்துள்ள பகுதிகள் மீது ரஷ்யப்
உக்ரைனில் போரின் காரணமாக பதுங்கு குழியில் வாழ்ந்து வர
உக்ரைனின் சமீபத்திய எதிர்த்தாக்குதல் ரஷ்யாவின் திட்
சில நாட்களுக்கு முன்பு ரஷ்யப் படைகளிடமிருந்து மீட்கப
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ளதை தொடர்ந்து
பிரதமர் மோடி பிரதமராக பதவியேற்ற 2014ம் ஆண்டு முதல் ஒவ்வொ
அமெரிக்காவில் அல்மெடா என்பவர் டொனால்டாவை திருமணம் செ
சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்த
கரீபியன் தீவு நாடுகளில் ஒன்று ஹைதி. இதன் தலைநகர் போர்ட
ரஷ்யா - உக்ரைன் இடையேயான மோதல் சர்வதேச அரசியலில் பெரும
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை
