நடந்து முடிந்த தேர்தலில் வாக்காளர்களுக்கு பண பட்டுவாடா செய்யாததால் ஊராட்சி மன்ற தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. பவுன்ராஜ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்ட அதிமுக செயலாளர்பவுன்ராஜ். இவர் இரண்டு முறை இதே தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாக தேர்வானவர். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வி பெற்றார்.
வாக்காளர்களுக்கு முறையாக பணப்பட்டுவாடா செய்யததால் தான் தோல்வி அடைந்ததாக நிர்வாகிகளுக்குள் வாக்குவாதம் எழுந்திருக்கிறது. எடக்குடி கிராமத்து மக்களுக்கு பண பட்டுவாடா செய்யச்சொல்லி ஊராட்சி மன்றதலைவர் தங்கமணியிடம் கேட்டிருக்கிறார். தேர்தல் விதிமுறைகளை காரணம்காட்டி அவர் மறுத்திருக்கிறார். இதனால் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக சொல்கிறார் தங்கமணி.
ஏப்ரல் -5ம் தேதி அன்று இதுகுறித்து தங்கமனி காவல் நிலையைத்தில் புகார் செய்திருந்தார். புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை எடுக்காததால் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏப்ரல் 23ம் தேதி மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, கீழமை நீதிமன்றத்தினை அனுகும்படி உத்தரவிட்டார். அதன் பின்னர் மாவட்ட நீதிமன்றத்தில் தங்கமணி வழக்குக் தொடுத்தார். இம்மனுவை விசாரித்த நீதிபதி, பூம்புகார் தொகுதியில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. பவுன்ராஜ் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டதை அடுத்து, போலீசார் பவுன்ராஜ் மீது வழக்கு பதிவு செய்திருக்கின்றனர்.
இலங்கையில் ஏற்பட்ட கலவரத்தின் போது சிறையில் இருந்து,
மதுரை- விருதுநகர் மாவட்டத்தில் இன்று மற்றும் நாளை நடை
முன்னாள் முதல்-மந்திரி
100 நாள் வேலைத்திட்டம் எனப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊ இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை உதாரணமாக கொண்டு இ விழுப்புரம் மாவட்டத்தில் வாக்குச் சவாடிகளுக்கு அனுப உத்தர பிரதேச மாநிலத்தில் இந்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் உதயநிதி ஸ்டாலின், தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டிய அ.தி.மு.க. தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆகிறது. 1972-ம் ஆண்டு அக தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்ற ப சென்னையில் மேலும் இரண்டு மெட்ரோ ரயில் நிலையங்கள் இன்ற புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலைச் சேர்ந்தவர் துரைரா தீனதயாள் சேவை மையம், உலக கலை விளையாட்டு கூட்டமைப்பு, மத குஜராத்தில் காந்திநகர்-மும்பை வழித்தடத்தில் புதிய வந தமிழக தேர்தல் களம் உச்சக்கட்ட பரபரப்பை நெருங்கிவருகி
