கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு பயணிகள் ரயில் சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது இந்த தகவலை அவர் வெளியிட்டார்.
புதிய ரயில் பாதைகளை அமைக்கும் பணியை எதிர்காலத்தில் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட மாட்டாது. புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த ரயில்வே திணைக்களம் பல திட்டங்களை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் ராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
உள்நாட்டு ஊழியர்களை பயன்படுத்தி இந்த ஒப்பந்தம் ஆரம்பிக்கப்படும். முடிந்தளவு வெளிநாட்டு ஊழியர்களுடன் ஒப்பந்தமின்றி இந்த திட்டம் அமுல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
விமான நிலையத்தில் இருந்து ரயிலில் ஏறி செல்வதென்றால் எவ்வளவு இலகுவான விடயமாக இருக்கும். அதற்கமைய இந்த திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படும்.
திட்டத்திற்கமைய விமான நிலையத்தில் இருந்து கொழும்பு, குருநாகல், கண்டி, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல இடங்களுக்கு செல்ல கூடிய வகையில் இந்த திட்டத்தை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
காலி முகத்திடல் போராட்டக்காரர்களால் காலி முகத
விடுதலைபுலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களால் த
நான் அச்சப்பட மாட்டேன், மரணிக்கவும் பயமில்லை, முடிந்த
இலங்கையில் கையிருப்பில் உள்ள பைசர் தடுப்பூசிகள் எதிர
கோதுமை மாவை திறந்த கணக்குகளின் கீழ் இறக்குமதி செய்வதற
கஜீமா தீ விபத்தில் தீக்கிரையாக்கப்பட்ட எளியவர்களின்
கொரோனா தொற்றினால் இறக்கும் நபர்களின் உடல்களை தகனம் செ
பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் மகனான யோசித்த ராஜபக்சவின்
மேல் மாகாண பாடசாலைகளின் அனைத்து தரங்களையும் 2 வாரத்தி
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில்
இலங்கை சுதந்திர தினத்தைக் கொண்டாடிய சந்தர்ப்பத்தில்
பாடசாலைக்கு சாப்பிடாமல் பட்டினியில் செல்லும் மாணவர்
ஆசிரியர், அதிபர் வேதன பிரச்சினை குறித்து பிரதமர் மகிந
மீண்டும் யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளராக இன்று தனத
கோட்டாபய ராஜபக்சவின் வீட்டிற்கு சென்று மக்கள் கற்களை