அரசு, ஜனாதிபதித் தேர்தலை நடத்தினால்கூட அதனை எதிர்கொள்வதற்கு பிரதான எதிர்க்கட்சி தயாராகவே இருக்கின்றது. எனவே, தேர்தலை பிற்போடாமல் உரிய காலத்தில் நடத்துமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
எந்நேரத்திலும் தேர்தலை எதிர்கொள்வதற்கு நாம் தயார். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆக, முடிந்தால் தேர்தலை நடத்துமாறு அரசுக்கு நாம் சவால் விடுக்கின்றோம். தேர்தலை சந்திக்க அச்சமில்லையெனில் எதற்காக உள்ளாட்சிமன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்படவேண்டும்.
அதேபோல சிறு சட்டத்திருத்தம் ஊடாக மாகாணசபைத் தேர்தலை நடத்தலாம். அதையும் அரசு செய்யாமல் இருப்பது ஏன்? அரசமைப்பின் பிரகாரம் அடுத்த வருடம் நாடாளுமன்றம் மற்றும் ஜனாதிபதித் தேர்தல்களை ஜனாதிபதிக்கு நடத்த முடியும். அவ்வாறு நடத்தப்பட்டால் அந்த தேர்தல்களையும் வெற்றிகரமாக எதிர்கொள்ள ஐக்கிய மக்கள் சக்தி தயாராகவே இருக்கின்றது.
ஐக்கிய மக்கள் சக்திக்குள் பிளவு இல்லை. கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அரசுக்கு எதிரான ஆட்டத்தை ஓரணியாகவே எதிர்கொள்வோம். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவே எமது ஜனாதிபதி வேட்பாளர்.” – என்றார்.
இலங்கையின் சிறைச்சாலைகளில் ஊழல் மற்றும் முறைகேடுகளை
நாடு தற்போது எதிர்க் கொண்டுள்ள பிரச்சினைக்கு தீர்வு க
கொழும்பு பங்குச் சந்தையில் நேற்றைய தினம் எதிர்பாராத வ
அரசின் தீர்க்கதரிசனம் அற்ற தீர்மானத்தின் காரணமாக தற்
சீனாவிலிருந்து மேலும் 20 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள
எதிர்வரும் ஏப்ரல் மாதம் மக்களுக்கு நிவாரணம் வழங்கப்ப
நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்ட பின்னா்
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட 108 பேர் தாக்
இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் அர்த
நாடாளுமன்றம் நாட்டுக்கு சேவை செய்வதற்குப் பதிலாக நாட
கடந்த 6 மாதங்களுடன் ஒப்பிடுகையில் கருவாடு வகைகளின் வி
மன்னாரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (31) முதல் மீன்பிடிப் ப
தற்போதைய பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு மேலும
மாகாண சபைத் தேர்தலுக்கு முகங்கொடுப்பதற்கு ஐக்கிய மக்
ராஜபக்ச&n