கொரோனா தடுப்பூசியால் ஏற்படும் அனைத்து பக்க விளைவுகளையும் பிராந்திய சுகாதார மருத்துவ அதிகாரி அல்லது சுகாதார அமைச்சிற்கு தெரிவிக்க வேண்டும் என சுகாதார அமைச்சு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
மேலும், இவ்வாறான சம்பவங்கள் குறித்து ஆராய்வதற்கு உரிய அதிகாரிகளுக்கு விரிவான அறிக்கை வழங்கப்பட வேண்டும் என சுகாதார சேவைகளின் பிரதிப் பணிப்பாளரான வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (21-01-2022) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டில் இதுவரை காய்ச்சல் போன்ற லேசான பக்கவிளைவுகள் மாத்திரமே பதிவாகியுள்ளது. கடுமையான உடல்நலக் குறைபாடுகள் உள்ளவர்களுக்கு தடுப்பூசியை வழங்குவதைத் தவிர்க்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எந்தவொரு தீவிரமான நோய்களுக்கும் சிகிச்சை அளிப்பதற்கு தேவையான மருத்துவப் பணியாளர்களை நியமித்துள்ளதாகவும், எனவே தடுப்பூசி போடுவது தொடர்பில் பொது மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இலங்கையில், மீண்டும் ஒரு கொரோனா அலையைத் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வாகனங்களில் செல்வதற்கு தடை விதிப்பதற்கு எவ்வித சட்டம
வன இலாகாக்குரிய காணியாக இருந்தாலும் அக் காணிககளை அமைச
கரையோர புகையிரத பாதையில் புகையிரத சேவை நேர அட்டவணை மற
இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பாக தொடர்ந்து
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியானது நாட்டில் சர்வகட்சி அ
நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் நெற்கதிர் அறுவடை விழா இன்ற
தனியார் வகுப்பிற்கு சென்று விட்டு வீடு திரும்பிக்கொண
நெருக்கடி நிலைமைகளின் போது பொருளாதாரத்தை வலுப்படுத்
நுகேகொடை - மிரிஹான - பெங்கிரிவத்தை பகுதியில் ஜனாதிபதிய
மட்டக்களப்பில் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் கடந்த 2
பேரீச்சம்பழம் இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக
கைத்தொழில் பிணக்குகள் (திருத்தச்) சட்டமூலங்கள் இரண்டு
உலக சதுப்பு நில தினத்தை முன்னிட்டு சுற்றுச்சூழல் அமைச
மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதி கள் தவ
பௌத்த துறவிகளுக்கு சிறை கூடங்களை ஒதுக்கிய அரசாங்கத்த