அரச மருத்துவமனை மற்றும் மருத்துவ நிலையங்களில் சேவையாற்றும் சுமார் 500 தாதியருக்கு கோவிட் தொற்றியுள்ளதாக இலங்கை தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இவர்களில் கர்ப்பிணி தாய்மார் மற்றும் இரண்டு வயதுக்கும் குறைந்த பிள்ளைகள் இருக்கும் 50க்கும் மேற்பட்ட தாதியர்கள் இருப்பதாக அந்த சங்கத்தின் செயலாளர் எஸ்.பி.மெதவத்த தெரிவித்துள்ளார்.
தேசிய வைத்தியசாலையில் மாத்திரம் 200 தாதியருக்கு கோவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளதுடன் இவர்களில் 21 பேர் கர்ப்பிணி தாய்மார் எனவும் சொய்சா பெண்கள் மருத்துவனையில் 5 கர்ப்பணி தாய்மார் இருப்பதாகவும் கண்டி வைத்தியசாலையில் நான்கு கர்ப்பிணி தாய்மார் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
மீண்டும் பரவி வரும் கோவிட் காரணமாக கர்ப்பிணிகளான தாதிமார் மற்றும் பாலுட்டும் தாய்மாரின் நிலைமை பாரதூரமாக மாறக் கூடும் என்பதால், அவர்களுக்கு விசேட விடுமுறை அனுமதியை வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாகவும் மெதவத்த குறிப்பிட்டுள்ளார்.
தொற்றுக்கு உள்ளான தாதிமார் ஒரு வாரத்திற்கு பின்னர் மீண்டும் சேவைக்கு அழைக்கப்படுவதால், தொற்று பரவுவது மேலும் இலகுவாகியுள்ளது.
கோவிட் தடுப்பு வேலைத்திடடம் தற்போது தோல்வியடைந்துள்ளதால், அரசாங்கம் உடனடியாக இது தொடர்பில் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுள்ளார்.
மன்னார் மூர்வீதி,குருசுக்கோவில் பகுதியில் உள்ள வீடுக
இலங்கை எதிர்க்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்
ராஜபக்ஷக்கள் உகண்டாவிற்கு எடுத்துச் சென்றதாகக் கூறப
இன்று விசாக பூரணை தினத்தை முன்னிட்டு 240 சிறைக் கைதிகள்
பயங்கரவாத சட்டம் நீக்கப்பட வேண்டும் என்பதில் எவ்வித ம
உயிர்த்தஞாயிறுதின குண்டுதாக்குதலில் உயிரிழந்தவர
கஜீமா தீ விபத்தில் தீக்கிரையாக்கப்பட்ட எளியவர்களின்
உலகளாவிய ரீதியில் முன்னணி சுற்றுலா நாடுகளின் பட்டியல
இலங்கையின் 33ஆவது பொலிஸ்மா அதிபராகக் கடமையாற்றிய மஹிந
கொழும்பு – முகத்துவாரம் பிரதேசத்தில் சுமார் 10 மில்லி
தற்போது இலங்கை எதிர்கொண்டுள்ள மோசமான பொருளாதார நெருக
டொலர் நெருக்கடியால் கொழும்பு துறைமுகத்தில் தேங்கியு
யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி பேருந்தில் வர
இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல்
ஹம்பாந்தோட்டை அங்குணுகொலபலஸ்ஸ பிரதேச செயலாளர் பிரிவ