தலவாக்கலை பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்காகி நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் நேற்று சனிக்கிழமை இரவு 6.30 மணியளவில் தலவாக்கலை – வட்டக்கொடை மடக்கும்புர வடக்கி மலை பிரிவில் உள்ள மாரியம்மன் ஆலயத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.
கத்துக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்தவர் முருகையா சரவணன் வயது 31 என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் தற்போது லிந்துலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு அனுப்பவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் குறித்த கத்திக்குத்து தாக்குதல் பணத் தகராறு காரணமாக இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளன.
கத்தியால் குத்திய நபர் தலைமறைவாகியுள்ளதாகவும், அவரை கைது செய்வதற்கான நடவடிக்கை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மற்றும் நுவரெலியா கைரேகை அடையாளப்பிரிவு ஆகியோர் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.
தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில் இன்று
கொழும்பு மாவட்டத்தில் ஜனவரி முதலாம் திகதி முதல் இதுவர
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் முருகன் ஆலய வருடாந
நாட்டிற்கு பல்வேறு வகையிலும் அச்சுறுத்தலை ஏற்படுத்த
நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின
சிறுநீரகத்தில் கல் சேர்ந்திருப்பதை முன்கூட்டியே கண்
வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி பகுதி தனிமைப்படுத்தல் சட
அமைச்சரவை அமைச்சர்களின் இராஜினாமா கடிதங்களை ஜனாதிபத
பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு முதுகு பகுதியில் ஏற்பட்
வவுனியா - குட்செட் வீதியில் நேற்று முன்தினம் சடலமாக மீ
களுபோவில-பாடசாலை வீதியை சேர்ந்த நபர் ஒருவரை காவல்துறை
வவுனியாவில் தொடர் செயின் அறுப்புச் சம்பவங்களில் ஈடுப
நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொவிட்-19 தடுப்பூச
பொருளாதார ஸ்திரப்படுத்தல் தொடர்பான குறுகிய மற்றும் ந
148 ஆவது உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு யாழ் பிரதான அஞ்சல