கேரளாவில் நடந்த தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் பலியான சோக சம்பவம் நடந்துள்ளது.
கேரளாவின் வர்க்கலாவை சேர்ந்தவர் பிரதாபன், இவரது மனைவி ஷெர்லி, இவர்களுக்கு நிகில் மற்றும் அகில் என இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.
நிகிலுக்கு திருமணமாகி அபிராமி என்ற மனைவியும், 8 மாதங்களே ஆன ஆண் குழந்தையும் இருக்கிறது.
இந்நிலையில் சம்பவ தினத்தன்று அனைவரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த வேளை, உள்ளூர்நேரப்படி நள்ளிரவில் சுமார் 1.15 மணியளவில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் அதிகாலை 2 மணியளவில் அங்கு சென்று தீயை அணைத்தனர்.
அனைவரும் வெவ்வேறு அறைகளில் உறங்கிய நிலையில், நிகில் என்பவர் மட்டும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்தில் 8 மாத குழந்தை உட்பட ஐந்து பேர் பலியாகியுள்ளனர், முதற்கட்ட விசாரணையில் புகையை அனைவரும் சுவாசித்ததால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது.
மேலும் 2 மாடி வீட்டில் உள்ள அனைத்து அறைகளிலும் ஏசி வசதி செய்யப்பட்டிருந்தால், புகை வெளியேற வாய்ப்பில்லாமல் விபத்து நடந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே சி.சி.டி.வி-யை ஆய்வு செய்தபோது இரவு 1.15 மணி அளவில் தீ பிடித்ததாக தெரியவந்துள்ளதாகவும், தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாகவும் போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
கேரளாவில் வரதட்சணை கொடுமை சம்பவங்கள் நாளுக்கு நாள் அத
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்த மாத இறுதியில் இலங்க
தேனி மாவட்டம் போடியில் புதிதாக கட்டப்பட்டு வரும் மீன்
உத்தர பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் முஸ்லிம் ராஷ்ட்ர
மும்பை காங்கிரஸ் தலைவராக பாய் ஜக்தாப் கடந்த டிசம்பர்
ஈரானின் சபஹர் துறைமுக அபிவிருத்தி திட்டத்திற்கு இந்த
இந்த நிலையில், திருமணம் செய்து கொள்ள கதிர்வேல் சந்திய
இந்தியாவின் ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் “ரான்சம்வேர்&
தூத்துக்குடி மாவட்ட கடற்கரை பகுதிகளில் இருந்து இலங்க
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, சென்னை நொளம்பூர் பகுதியி ராமசாமி படையாச்சியாரின் 104-வது பிறந்தநாளை முன்னிட்டு ச தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில் நிறைய புகார்கள் வடசென்னையில் அயோத்திதாசருக்கு மணிமண்டபம் அமைக்கப்பட தென்கொரிய நாட்டின் ராணுவ மந்திரி சூ வூக் 3 நாள் அரசு மு
