இந்தியா மற்றும் இலங்கைக்கான இரண்டாவது டெஸ்ட் போட்டி பெங்களூர் மைதனாத்தில் நடைப்பெற்று வருகிறது.
கடந்த 12ம் தேதி பெங்களூரு மைதானத்தில் பகலிரவு போட்டியாக துவங்கிய இந்த கடைசி டெஸ்ட் போட்டியானது இரண்டாம் நாள் முடிவிலேயே கிட்டத்தட்ட போட்டி முடியும் நிலைக்கு வந்து விட்டது.
இலங்கை அணிக்கு 419 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் இரண்டு விக்கெட் இழப்புக்கு போராடி வருகிறது.
மூன்றாவது நாளான இந்திய அணி அபார வெற்றி பெறும் என்றே கூறலாம்.
இந்த நிலையில், போட்டியின் போது இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அடித்த சிக்ஸரால் ரசிகர் ஒருவருக்கு ஏற்பட்ட காயம் குறித்து தகவல் வெளியாகி தற்போது இணையத்தில் அதிகளவு வைரலாக பரவி வருகிறது.
அதில் ரோகித் சர்மா சிக்ஸர் விளாசும் போது பெங்களூரைச் சேர்ந்த 22 வயது ரசிகர் ஒருவர் டி கார்ப்பரேட் பாக்ஸ் என்கிற பிரிவில் அமர்ந்து போட்டியை ரசித்து கொண்டிருந்தபோது அவரின் மூக்கின் மீது பந்து பதம் பார்த்தது.
இதனால் அவருக்கு ரத்தம் கசிய உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.அதன் பின்னர் எக்ஸ்ரே எடுத்துப் பார்க்கையில் அவருக்கு மூக்கில் உள்ள எலும்பில் சற்று முறிவு ஏற்பட்டுள்ளது.
இதனிடையே தற்போது சில தையல்களும் போடப்பட்டுள்ளதாக ஹோஸ்மாட் மருத்துவமனையின் மருத்துவ இயக்குனர் டாக்டர் அஜித் பெனடிக் ரயான் அந்த ரசிகரின் காயம் குறித்து தெளிவான விளக்கத்தை அளித்துள்ளார்.
சிஎஸ்கே அணியின் பயிற்சி முகாமில் ஒரு இளம் வீரருக்கு ம
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு தொடங்கியது முதலே
இந்தியாவுக்கு மேலும் ஒரு வெண்கலத்தை வென்று கொடுத்துள
ஐபிஎல் 2022 சீசன் கிரிக்கெட்டில் நேற்று ராஜஸ்தான் ராயல்
ஐ.சி.சி. இருபதுக்கு - 20 உலகக் கிண்ண போட்டித் தொடர் ஒக்டோப
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன
கேரள அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தி
இந்திய வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி,இந்திய அணியுடனா
கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன
ஐபிஎல் தொடரில் இதுவரை அதிக சம்பளம் வாங்கிய வீரர் என்ற
ஒலிம்பிக் வரலாற்றில் 41 ஆண்டுகளுக்கு பிறகு பதக்கத்தை க
டோக்கியோ ஒலிம்பிக் பெண்கள் 10 மீ ஏர் பிஸ்டல் துப்பாக்கி
12-வது மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தி
பங்களாதேஷ் கிரிக்கெட் அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் வ
அவுஸ்ரேலியா அணிக்கெதிரான நான்காவதும் இறுதியுமான டெஸ
