இந்தியாவில் பங்கு சந்தை வீழ்ச்சியால் கணவர், மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்தின் பழைய குயவர்பாளையம் பகுதியில் வசித்து வந்தவர் நாகராஜன்(46). இவரும் இவரது மனைவியும் ஒன்று சேர்ந்து பங்கு சந்தையில் முதலீடு செய்துள்ளனர்.
பங்குச் சந்தை குறித்த அனைத்து விபரங்களையும் தெரிந்து வைத்துள்ள இவர் ஆலோசகராகவும் திகழ்ந்து வந்துள்ளார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த தம்பதி பங்கு சந்தையில் நல்ல லாபம் ஈட்டி வந்துள்ள நிலையில் உக்ரைன் நாட்டில் வெடிக்கும் போர் காரணத்தினால் பங்கு சந்தையில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான நாகராஜன் தனது மனைவியுடன் சேர்ந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மனைவியின் சகோதரி பல முறை கால் செய்தும் எடுக்காததால் சந்தேகத்தின் பெயரில் நேரடியாக வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது கதவை திறக்க முடியாததால் ஜன்னல் வழியாக எட்டி பார்த்த பொழுது இருவரும் பிணமாக தொங்கியதையடுத்து அதிர்ச்சியில் மூழ்கியுள்ளார்.
இதையடுத்து தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து பொலிஸ் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அ.தி.மு.க. 
லாட்டரி சீட்டை மீண்டும் கொண்டுவர அரசு முயல வேண்டாம் எ
மாநிலங்களவை எம்.பியும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின்
வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள்
மக்கள் பிரதிநிதிகளுக்கு தடுப்பூசி போட மத்திய அரசு அனு
கேரளாவில் கொரோனா பெருந்தொற்று இன்னும் கட்டுப்பாட்டு
பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நேற்று டெல்லியில் உள்ள
சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த 21வயது பெண் கிண்டியில் உ
அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் 6 சிலிண்டர் இலவசமாக வழங்
இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தாக்கத்தால
உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநா
வாசுதேவநல்லூர் தொகுதியைப் பொதுத்தொகுதியாக அறிவிக்கக
இந்திய சமூக ஜனநாயக கட்சியின் (எஸ்டிபிஐ) மாநில செயலாளர்
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகர
