குருணாகல், நாரம்மல பொது நூலகத்துடன் கூடிய பிரதேச சபை கட்டடத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று திறந்து வைத்தார்.
குருநாகல் – புத்தளம் வீதியில் யந்தம்பலாவ பிரதேசத்தில் அமைந்துள்ள தனது மாவட்ட ஒருங்கிணைப்பு அலுவலகத்தை திறந்து வைக்க வீதியை மாற்றி பிரதமர் பயணித்ததாக தெரிய வருகிறது.
பிரதமரின் பிரத்தியேக செயலாளர் ரோஹித ராஜபக்ஷவின் பங்கேற்புடன் இந்த அலுவலகம் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்து. எனினும் நேற்றைய தினம் ரோஹித ராஜபகஷ பங்கேற்கவில்லை என தெரியவந்துள்ளது.
குறித்த அலுவலகத்தின் ஒருங்கிணைப்பு பொறுப்பை ரோஹிதவிடம் ஒப்படைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாரம்மல பொது நூலகத்துடன் கூடிய பிரதேச சபைக் கட்டடத்தை திறந்து வைத்த பிரதமர், தனது ஒருங்கிணைப்புக் காரியாலயத்தை திறப்பதற்காக நாரம்மல-குருநாகல் பிரதான வீதிக்கு வரவிருந்தார். எனினும் எரிபொருள் வரிசைகளால் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க அதிவேக நெடுஞ்சாலை ஊடாக யந்தம்பலாவ சென்றடைந்துள்ளார்.
நாரம்மல பகுதியிலிருந்து பயணத்தை ஆரம்பித்த பிரதமரின் வாகனத் தொடரணி அலவ்வ ஊடாக நாகலகமுவ அதிவேக வீதி நுழைவாயிலில் மத்திய அதிவேக வீதிக்குள் பிரவேசித்து யந்தம்பலாவை நோக்கிச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சட்டவிரோதமான வழிகளில் வெளிநாடுகளுக்குச் செல்லும் இல
கொழும்பு - கோட்டையில் அமைந்துள்ள ஐக்கிய மக்கள் சக்த
நாட்டில் தற்போது நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார நெ
நாட்டில் உள்ள பொருளாதார பிரச்சினை காரணமாகச் சரியான மு
நுவரெலியா – தலவாக்கலை வீதியில் லிந்துலை பிரதேசத்தில
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு பயணிகள் ரயில
சட்டவிரோதமாக 75 மில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டியமை தொட
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கோடிக்கணக்கான பெறுமதி
கொரோனா தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறினார் என்ற குற்றச
இலங்கை எதிர்கொண்டுள்ள நெருக்கடியான நேரத்தில் அந்நாட
முள்ளியவளையில் நகர் பகுதியில் விபத்தினை ஏற்படுத்திய
மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந
மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கல்லடி
நாராஹென்பிட்டி அபயராம விகாராதிபதி முருத்தெட்டுவே ஆன
இந்திய தனியார் முதலீட்டாளர்களின் பங்களிப்புடன் கடலட