தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில்,இலங்கைக்கான பயணத்தை மறுபரிசீலனை செய்யுமாறு அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார மற்றும் வர்த்தக திணைக்களம் தமது குடிமக்களை வலியுறுத்தியுள்ளது.
புதுப்பிக்கப்பட்ட பயண ஆலோசனையை நேற்று வெளியிட்டுள்ள திணைக்களம், இலங்கையில் தற்போது நிலவும் நிலைமை குறித்து கவலைகளை எழுப்பியுள்ளது.
பாதுகாப்பு சூழ்நிலை காரணமாக இலங்கைக்கு பயணம் செய்வதற்கான உங்கள் தேவையை மறுபரிசீலனை செய்யுமாறு நாங்கள் இப்போது உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.
பாரிய ஆர்ப்பாட்டங்களின் போது பல வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன. எனவே இலங்கையில் உள்ள தமது குடிமக்கள் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் நிகழ்வுகளைத் தவிர்க்கவேண்டும்.
இலங்கையில் பொது அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. எனவே அதிகாரிகளின் உத்தரவுகளை கடைப்பிடிக்கவேண்டும்.
எல்லா நேரங்களிலும் உங்களுடன் தொடர்புடைய பயண மற்றும் அடையாள ஆவணங்களை எடுத்துச் செல்லுங்கள். இலங்கை முழுவதும் பொது ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
அவை போக்குவரத்து மற்றும் பொதுப் போக்குவரத்திற்கு இடையூறுகளை ஏற்படுத்தும். எரிபொருள் விநியோகத்தில் இடையூறு மற்றும் திட்டமிட்ட, நீண்ட மின்சார தடைகளை நீங்கள் சந்திக்கலாம்.
சில மருந்துகள் மற்றும் உணவுப் பொருட்களின் தட்டுப்பாடு உங்களை பாதிக்கலாம் என்றும் அவுஸ்திரேலியா தமது குடிமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா க
கண்டம் விட்டு கண்டம் பாயும் 2 ஏவுகணைகளை சோதித்து வடகொர
இந்தியாவின் அண்டை நாடான வங்காளதேசத்தில் கொரோனா தொற்ற
தங்கள் சொந்த நாட்டு இறையாண்மையைப் பாதுகாப்பதற்காக உக
சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலக
சீனாவின் பிறப்பு விகிதம் கடந்த 2022-ம் ஆண்டு ஆயிரம் பேருக
உலகில் முதன் முதலாக கொரோனா தொற்று சீனாவில் அறியப்பட்ட
வேறு தொகுதியில் போட்டியிட வைத்தால் அதிமுக மேற்கு மாநி
உக்ரைனுக்கு அமெரிக்கா படைகளை அனுப்பாது என்று அமெரிக்
உக்ரைனை தன்வசமாக்கும் நோக்கில் அந்த நாட்டின் மீது ரஷி
வடக்கு-மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடுகளில் ந
பாகிஸ்தானின் வடக்கு பகுதியில் கில்கிட்-பால்டிஸ்தான்
கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 15 வயது சிறுவன் பொலிஸாரால் க
உக்ரைன் - ரஷ்யா இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில், தல
உக்ரைனில் தந்தை ஒருவர் தனது மகளைக் கட்டிக்கொண்டு கதறி
