புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அமைக்கப்படும் அரசாங்கத்தின் அமைச்சரவையின் எண்ணிக்கையை 20 ஆக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் பொறுப்பேற்க உள்ள அமைச்சுக்களும் 20 அமைச்சுகளில் அடங்கும் எனக் கூறப்படுகிறது. புதிய அமைச்சரவை அடுத்த வாரத்திற்கு முன்னர் பதவியேற்கும் என தெரியவருகிறது.
மகிந்த ராஜபக்ச பதவி விலகியதை அடுத்து புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேற்று மாலை நியமித்தார்.
புதிய அரசாங்கத்தின் கீழ் அமைச்சு பதவிகளை பெற்றுக்கொள்ளுமாறு விடுத்த கோரிக்கைகளை நாடாமளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் பிரதான கட்சிகள் நிராகரித்தன.
இந்த நிலையில் பொதுஜன பெரமுவின் நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட புதிய அமைச்சரவை நியமிக்கப்படவுள்ளது. நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த உடனடியாக அமைச்சரவையை நியமித்து நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்திய பின்னரே சர்வதேச நாணய நிதியம் உட்பட உதவி வழங்கும் நிறுவனங்கள் மற்றும் நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து உதவிகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் கூறப்படுகிறது.
ஹஜ் பெருநாளை முன்னிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமத
யாழில் போதைக்கு அடிமையான சிறுமி 08 மாத கர்ப்பமாகவுள்ள ந
திருகோணமலையில் இளைஞர் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட
ஒரு ஸ்மார்ட் தொலைபேசியின் விலை குறைந்தபட்ச விலை எண்பத
ஊடகவியலார்களுக்காக நாடாளுமன்றத்தில் வழங்கப்படும் தே
வவுனியா மாகாண பொது வைத்தியசாலையினை போதனா வைத்தியசாலை
இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ் இயங்க
இரணைதீவிற்கு மக்கள் சென்று வருவதில் காணப்படுகின்ற கெ
ஒமிக்ரோன் எனப்படும் புதிய கோவிட் மாறுபாடு சிறுவர்கள்
கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் அபிவிருத்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக
குருவிட்ட, கந்தலந்த பிரதேசத்தில் மனைவி கோடரியால் த
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலயத்தில் 18
உலகில் மகிழ்ச்சியான முறையில் மக்கள் வாழும் நாடுகளின்
அரசாங்கத்தில் முக்கிய அமைச்சு பதவி வகிக்கும் ஒருவர