உக்ரைனில் உக்கிர தாக்குதலை முன்னெடுத்துவரும் ரஷ்ய துருப்புகள் Sievierodonetsk நகரில் புகுந்துள்ள நிலையில், இன்னொரு மரியுபோலாக மாறிவிடும் அபாயம் இருப்பதாக நகர மேயர் கவலை தெரிவித்துள்ளார்.
உக்ரைனின் Sievierodonetsk நகரில் தொலைத்தொடர்பு மற்றும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு மொத்தமாக சிதைக்கப்பட்டுள்ளதாக நகர மேயர் குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைனின் டான்பாஸ் பகுதியில் அமைந்துள்ள அனைத்து தொழிற்சாலைகளையும் கைப்பற்ற ரஷ்யா முயல்வதாகவும், அதற்கு முதற்படியாக Sievierodonetsk நகரை கைப்பற்றுவது முக்கியம் என ரஷ்ய துருப்புகள் செயல்பட்டு வருவாதாக கூறப்படுகிறது.
இருப்பினும் உக்ரைன் துருப்புகள் கடுமையாக போரிட்டு வருவதாகவும் நகர மேயர் தெரிவித்துள்ளார். ஆனால் ரஷ்ய துருப்புகள் நகருக்குள் நுழைந்துள்ளது உண்மை எனவும், உக்கிர தாக்குதல் முன்னெடுப்பதாகவும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

மேலும், ஒவ்வொரு மணி நேரத்திற்கும் அப்பாவி மக்கள் ரஷ்ய துருப்புகளால் பலியாவதாகவும், எண்ணிக்கை வெளியிட முடியாத நிலை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒருகட்டத்தில் 100,000 அப்பாவி மக்கள் நகருக்குள் சுரங்க அறைகளில் சிக்கியிருந்த மக்கள் வெளியேறிய நிலையில், தற்போது 12,000 அல்லது 13,000 பேர்கள் மட்டுமே எஞ்சியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Sievierodonetsk நகரம் ரஷ்ய துருப்புகளால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதை ஜனாதிபதி ஜெலென்ஸ்கியும் உறுதி செய்துள்ளதுடன், நிலைமை மிக மோசமாக உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தலிபான்களுக்கு பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் க
புதிய நோய்களுக்கு மருந்துகளை கண்டு பிடிக்கும் போது அத
உக்ரைனில் மக்கள் தஞ்சமடைந்துள்ள பகுதிகள் மீது ரஷ்யப்
தமிழ் சினிமா மட்டுமின்றி இந்
காசா முனை மீது இஸ்ரேல் நடத்தி வரும் வான் தாக்குதல்களி
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும், இளவரச
கொரோனா வைரஸ் பரவல், உலகுக்கு இன்னும் அச்சுறுத்தலாகவே
அவுஸ்திரேலியாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த முகமது ரகமத
உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான போர் தொடர்ந்து 13
உலகளவில் செவி திறன் பிரச்சனையால் பலர் பாதிக்கப்பட்டு
இந்தோனேசியாவில் சிரப் மற்றும் மருந்து திரவங்களால்
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேற தொ
சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவிலுள்ள வீடு ஒன்றிற்குள் ஆய
அவுஸ்ரேலியாவின் டாஸ்மேனியா மாநிலத்தின் கடற்கரையில் 14
தைவானின் தாய்டங் நோக்கி சென்றுகொண்டிருந்த பயணகள் ரெய
