ரஷ்யா - உக்ரைன் இடையே ஏற்பட்டுள்ள போரில் ரஷ்யாவின் உயர்மட்ட இராணுவத் தளபதிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் ரோமன் குடுசோவ், உக்ரைன் துருப்புக்களால் கொல்லப்பட்டதாக ரஷ்யா ஒப்புக்கொண்டுள்ளது.
உக்ரைன் - டோன்பாஸ் பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றின் மீது அவர் தலைமையேற்றுத் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தபோது கொல்லப்பட்டதாக ‘ரோசியா 1’ என்ற ரஷ்ய அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

‘டோனட்ஸ்க் மக்கள் குடியரசு’ என்று தம்மைத் தாமே அறிவித்துக்கொண்ட பகுதியிலிருந்து குடுசோவ் படைகளை நகர்த்தி சென்றதாக அறியமுடிந்துள்ளது.
இருப்பினும் இந்த செய்தி குறித்து ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சகம் ஏதும் கூறவில்லை. எந்த சூழ்நிலையில் ரோமன் குடுசோவ் கொல்லப்பட்டார் என்ற விபரங்களைத் தராமல், அவர் கொல்லப்பட்டதை உக்ரைன் இராணுவமும் உறுதி செய்துள்ளது.

அத்துடன் யுத்தம் ஆரம்பித்ததிலிருந்து இதுவரை 12 ரஷ்ய ஜெனரல்களைக் கொன்றுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளதுடன் , குறைந்தபட்சம் 7 மூத்த ரஷ்ய ராணுவத் தளபதிகள் கொல்லப்பட்டதாக மேற்கத்திய நாடுகளின் உளவு அமைப்புகள் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
சவுதி அரேபியாவை சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கசோகி பட
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் நிலத்திற்கு அடியில் ம ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறியும், சர கரீபியன் கடலில் உள்ள தீவு நாடுகளில் ஒன்றான
உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா, அந்நாட்டின் 4 நகரங ரஷ்யா - உக்ரைன் போர் இன்றுடன் 20 ஆவது நாளாக தொடர்ந்து தீவ இளவயது உக்ரேனிய சிறுமி ஒருவர், ரஷ்ய துருப்புகள் கால்க அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக கறுப்பினப் பெண் உரு தென்னாபிரிக்கா வரலாறு காணாத வன்முறை வெறியாட்டங்களை ச துபாய் நாட்டில் டெய்ரா பகுதியில் அல் மராரில் ஒரு அடுக ஈராக் நாடடின் வடக்கு பகுதியில் உள்ள பாஷிகா பகுதியில் பயண தடைக்கு பின்னர் இந்தியாவில் தவித்த ஆஸ்திரேலியர்க ஜேர்மனியிலிருந்து நாடு திரும்பிய ரஷ்ய எதிர்க்கட்சித பிரம்மபுத்ரா நதியில் அணை கட்டும் திட்டத்துக்கு இந்தி
