இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், இலங்கைக்கு வரவிருக்கும் டீசல் கையிருப்பை மின்சார சபைக்கு வழங்குவதற்கு உறுதியளித்துள்ளதன் காரணமாக, நாளைமுதல் மின்வெட்டு நேரம் குறைக்கப்படும் என இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.சி.பெர்டினாண்டோ தெரிவித்தார்.
நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்தார்.
இதன் விளைவாக நாளை முதல் நான்கு மணி நேரத்துக்கும் குறைவான மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என்று எதிர்பார்ப்பதாகவும் மின்சார சபைக்கு தொடர்ந்து உலை எண்ணெய் மற்றும் டீசல் விநியோகம் கிடைத்தால், மின்வெட்டை முடிவுக்கு கொண்டு வர முடியும் என்றும் குறிப்பிட்டார்.
மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்ய மின்சார சபையினால் தற்போது முடியாது எனவும் தற்போது நிலக்கரி மின் உற்பத்தி மூலம் தேவையைப் பூர்த்தி செய்து வருவதாகவும் கூறினார். நீர் மின் நிலையங்கள் மூலம் 300 மெகாவோட் மட்டுமே உற்பத்தி செய்ய முடியும் என்று கூறிய அவர், மாலை 6:30 மணி முதல் இரவு 10 மணி வரை 800 மெகாவாட் தேவைப்படுவதாகவும் நீர் மின் மூலம் அதை நிறைவேற்ற முடியாது என்றும் கூறினார்.
அனல் மின் நிலையங்கள் தேசிய மின் கட்டமைப்புக்கு 1,100 மெகாவோட் வழங்குகின்ற போதும் எரிபொருள் பற்றாக்குறையால் அதுவும் பாதிக்கப்படுகிறது என்றார்.
குருந்தூர் மலையின் கீழ் பகுதியில் பொது மக்களின் பல ஏக
அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பைசர் கொவிட்-19 தடுப்பூச
முல்லைத்தீவு – குருந்தூர்மலை தேசிய மரபுரிமைச் சின்ன
நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தற்போது நி
இலங்கை பாரதிய ஜனதா கட்சி என்ற பெயரில் அரசியல் கட்சியொ
சமுர்த்தி தொகையைப் பெற்றுக் கொண்டு வீட்டுக்குச் சென்
வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்
இலங்கையில் பாதுகாப்பற்ற பாலுறவில் ஈடுபட வேண்டாம் என எ
அடுத்த சிறுபோக பயிர் செய்கையின் போது விவசாயிகளுக்கு உ
இந்தியா இலங்கையின் நெருங்கிய நட்பு நாடு என்பதனால் எந்
நாட்டின் கொரோனா தொற்றுக்களின் எண்ணிக்கை அதிகரித்து வ
எந்த சூழ்நிலையிலும் கூட, நாட்டரிசி 1 கிலோ 100 ரூபாவுக்கு
இலங்கையில் மேலும் 13 கொரோனா மரணங்கள்- நாட்டில் பதிவாகும
காலி முகத்திடல் சம்பவம் தொடர்பில் மேல் மாகாண சபையின்
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாள் சம்பளம