உலகின் மிகப்பெரிய ஏவுகணை சோதனை என உலக நாடுகளை நம்ப வைத்த வடகொரியாவின் தில்லாலங்கடி வேலைகள் தற்போது அம்பலமாகியுள்ளது.
அமெரிக்காவின் பிரபல திரைப்படம் ஒன்றின் பாணியில் வடகொரியா வீடியோ ஒன்றை வெளியிட்டு உலக நாடுகளை ஏமாற்றியுள்ளதாக இந்த விவகாரம் தொடர்பில் தென் கொரியாவும் அமெரிக்காவும் குற்றஞ்சாட்டியுள்ளது.
Hwasong-17 என்ற அணு ஆயுதம் தாங்கும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளதாக வடகொரியா கடந்த வாரம் அறிவித்தது.
ஆனால் செயற்கைக்கோள் படங்கள் மற்றும் வானிலை முன்னறிவிப்புகளை ஆய்வு செய்த பிறகு, தென் கொரியா மற்றும் அமெரிக்கா ஆய்வாளர்கள் வீடியோவில் உள்ள ஆயுதம் உண்மையில் ஹ்வாசாங்-15 என்றும், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் வடகொரியாவால் சோதனை முன்னெடுக்கப்பட்டது என்பதை உறுதி செய்துள்ளனர்.
மட்டுமின்றி, ஏவுகணை சோதனைக்கு பின்னர் கிம் ஜோங் உன் வெளியிட்ட வீடியோ ஒன்று உலக அளவில் கவனத்தை ஈர்த்தது. தற்போது, ஏவுகணை சோதனை தோல்வியில் முடிந்த நிலையில், அதை திசை திருப்பவே, கிம் ஜோங் உன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் எனவும் தெரிய வந்துள்ளது.
வடகொரியாவின் வரலாற்றில் இவ்வாறான ஏவுகணை சோதனை முன்னெடுக்கப்பட்டதில்லை எனவும், இது உலக நாடுகளுக்கு கண்டிப்பாக பயத்தை ஏற்படுத்தும் எனவும், வடகொரிய அரசு செய்தி நிறுவனம் குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக
ரஸ்ய படையினருடன் சண்டையிடுவதற்காக சுமார் 66ஆயிரம் உக்
மெக்சிகோ நாட்டை நேற்று கிரேஸ் சூறாவளி புயல் தாக்கியது
கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 15 வயது சிறுவன் பொலிஸாரால் க
உக்ரைன் மீது ரஷியா இன்று 13-வது நாளாக போர் தொடுத்து வர
அமெரிக்காவின் தனியார் விண்வெளி நிறுவனம் ஸ்பேஸ் எக்ஸ்.
ஆஸ்திரேலியாவில் உள்நாட்டு அரசியலில் ரகசிய வெளிநாட்ட
அடுத்த கன்சர்வேடிவ் தலைவர் மற்றும் பிரதமர் பதவிக்கான
உக்ரைனில் அதிகாரப்பூர்வமான மற்றும் உறுதிப்படுத்தப்ப
உக்ரைனின் மரியுபோல் நகரில் அத்துமீறி நுழைந்து தாக்கு
ரஷ்யாவின் திட்டமிட்ட வெற்றி தின கொண்டாட்டங்களில் த
கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக உலகமெங்கும் பல்வேறு தட
உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கொல்லப்பட்டாலும் கூட அடுத
உக்ரைனின் மரியுபோல் நகரம் இன்று அதிகாலைக்குள் முழுவத
அமெரிக்காவுக்கு எச்-4 விசா மூலம் செல்பவர்கள், அங்கு பணி
