ரஷியா போர் தொடுத்துள்ள உக்ரைன் பகுதிகளில் பொதுமக்களை வெளியேற்றும் பணிகள் எதுவும் இன்று நடைபெறவில்லை என அந்நாட்டின் துணை பிரதமர் ஐரினா வெரிஷ்சக் தெரிவித்துள்ளார். போர் நடைபெறும் பகுதிகளில் சாலைகள் மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கிறது. இதனால் மீட்பு நடவடிக்கைகள் எதுவும் இன்று நடைபெறவில்லை என கூறியுள்ளார்
ரஷியாவுடனான போரில் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு மேலும் 800 மில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ உதவிகள் வழங்கப்படும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.
உக்ரைனுக்கு தொடர்ந்து ராணுவ உதவிகளை அளித்து வரும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மீண்டும் நன்றி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் நாட்டின் மரியுபோல் நகரை ரஷியா கைப்பற்றியது. ரஷிய படைகள் கைப்பற்றியதன் மூலம் மரியுபோல் நகருக்கு சுதந்திரம் கிடைத்து விட்டது என அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைன் அரசுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவு அளிக்கும். உக்ரைன் அரசாங்கத்திற்கு 800 மில்லியன் டாலர்களை ராணுவ உதவியாக வழங்கப்படும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
அமெரிக்கா உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது. இதையடுத்து, அமெரிக்காவின் துணை அதிபர் கமலா ஹாரிஸ், மார்க் ஜுகர்பெர்க் உள்ளிட்ட 29 அமெரிக்கர்கள் தங்கள்து எல்லைக்குள் நுழைய பயண தடை விதித்துள்ளது ரஷியா.
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால் உயி
அமெரிக்க போர் விமானங்களில் சீன கொடிகளை பறக்கவிட்டு ரஷ
வடகொரியா சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு அ
உக்ரைன் மீது போரை தொடங்கியுள்ள ரஷிய அதிபர் புதினை கட
பல்வேறு நாடுகள் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்கு
சீனாவின் ஹூபெய் மாகாணத்தின் தலைநகரான உகானை நேற்று முன
அமெரிக்கா, கனடா, பெல்ஜியம் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில
மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுத்
உகாண்டா நாட்டில் நடைபெறும் சர்வதேச பாரா பேட்மிண்டன் ப
அமெரிக்காவில் சிறப்பு பல்பொருள் அங்காடியொன்றுக்குள்
புதிய நோய்களுக்கு மருந்துகளை கண்டு பிடிக்கும் போது அத
உக்ரைன் மீது ரஷ்யா 14 வது நாளாக தொடர்ந்து தாக்குதலை நடத
