More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • றம்புக்கண துப்பாக்கிச் சூடு- நீதிமன்று விடுத்துள்ள உத்தரவு!
றம்புக்கண துப்பாக்கிச் சூடு- நீதிமன்று விடுத்துள்ள உத்தரவு!
May 03
றம்புக்கண துப்பாக்கிச் சூடு- நீதிமன்று விடுத்துள்ள உத்தரவு!

விசாரணைகளின் குறைப்பாடுகளை கூறி காலத்தை வீணடிக்காது சம்பவம் தொடர்பாக சரியாக விசாரணைகளை நடத்தி நீதிமன்றத்திற்கு அறிக்கை தாக்கல் செய்யுமாறு கேகாலை நீதவான் வாசனா நவரத்ன, குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.



அத்துடன் றம்புக்கண சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள கேகாலை சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் மற்றும் ஏனைய காவல்துறை அதிகாரிகள் மூன்று பேரை பிணையில் விடுதலை செய்யுமாறு விடுத்த கோரிக்கையையும் நீதவான் நிராகரித்துள்ளார்.



எரிபொருள் கிடைக்காதது சம்பந்தமான றம்புக்கணயில் நடைபெற்ற மக்கள் ஆர்ப்பாட்டத்தின் போது, காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது.



இதன் போது முன்வைக்கப்பட்ட வாதங்களை கவனத்தில் எடுத்துக்கொண்ட நீதவான், சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கேகாலை சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் உட்பட எனைய காவல்துறையினருக்கு பிணை வழங்கினால், விசாரணைகளுக்கு தடையேற்படக் கூடும் மற்றும் மக்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படலாம் எனக் கூறி, சந்தேக நபர்களை தொடர்ந்தும் எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.





அன்றைய தினம் சம்பவம் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றத்தை நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு நீதவான், குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.



மேலும் நாட்டில் விசாரணைகளை நடத்தும் பலமான நிறுவனமான குற்றவியல் விசாரணை திணைக்களம் தொடர்பான மக்களுக்கு இருக்கும் கடும் நம்பிக்கைக்கு பங்கம் ஏற்படாத வகையில் நடவடிக்கைகளை எடுக்குமாறும் நீதவான் அறிவித்துள்ளார்.



 



எரிபொருளை கோரி, றம்புக்கண கூட்டுறவு எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு அருகில் கடந்த 19 ஆம் திகதி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, ஆர்ப்பாட்டத்துடன் சம்பந்தப்படாத 41 வயதான சமிந்த லக்சான் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தை சுட்டுக்கொல்லப்பட்டார்.



மேலும் 13 பேர் காயமடைந்தனர். நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையின் போது, குற்றவியல் விசாரணை திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar26

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் நேற்

Aug01

புதுச்சேரியில் தினசரி கொரோனா  பரவல் 100-க்கு கீழ் குறை

Jul03

கடந்த சட்டமன்ற தேர்தலின் போது அரசியலை விட்டு ஒதுங்கி

Sep22

மியன்மாரில் சர்வதேச சட்டவிரோத கும்பலிடம் சிக்கித் தவ

Mar05

கட்சி தொடங்கலாமா? என்று கடந்த இரண்டு வருடங்களுக்கு மு

Feb06

இந்திய அரசாங்கமும் விவசாயிகளும் அமைதி காக்க வேண்டும்

Aug29

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்க

Apr01

சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓரிரு நாட்களே உள்ள நிலைய

May15

தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அற

Oct08

இந்திய விமானப்படையின் 89-வது தினம் இன்று கொண்டாடப்பட்ட

Sep13
Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 16 (08:15 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 16 (08:15 am )
Testing centres