படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் டி.சிவராமின் நினைவேந்தல் நிகழ்வும் கவனயீர்ப்பு போராட்டமும் மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன்போது சிவில் உடையில் ஊடகவியலாளர்களை காணொளி எடுத்த பொலிஸாரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், மட்டக்களப்பிலுள்ள ஊடகவியலாளர்களையும் கொலை செய்யவா முயற்சிக்கின்றீர்கள் என காட்டமான முறையில் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்நிலையில் அது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள சாணக்கியனால் எச்சரிக்கப் பட்ட பொலிஸ் அதிகாரியின் மகள் தனது தந்தை தொடர்பில் குறிப்பிடுகையில்,
எனது தந்தை மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் திணைக்களத்துக்கு தகவல் சேகரிக்கும் மாவட்ட அதிகாரி எனவும், தனது தந்தையாரை சாணக்கியன் தகாத வார்த்தைகளால் கதைத்தமை தவறு என அவர் கூறியிருந்தார்.
இதனையடுத்து பெண்ணின் கருத்துக்கு,
சகோதரி உங்களது தந்தையைக் குறிப்பிட்டுப் பேசிபோது உங்களுக்கு கோபம் வருகிறது. தந்தைக்காக வாதாடுகிறீர்கள் .அது உங்கள் தந்தை மகள் பாச உணர்வு. நீங்கள் சற்று நிதானமாகச் சிந்தித்துப் பாருங்கள். இவ்வாறு புகைப்படம் சேகரித்துக் கொடுத்ததால் கொல்லப் பட்ட ஊடகவியலாளர்களுக்ககும் மகன்கள், மகள்கள் உள்ளனர் .தந்தையைத் திட்டியதற்கே உங்களுக்கு இவ்வளவு கோபமும் வலியும் வருகின்றது என்றால் தந்தையை இழந்த பிள்ளைகளின் நிலையையும் சற்று சிந்தித்துப் பாருங்கள் என சமூக ஆர்வலர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் தொடர் போ
கடந்த சில நாட்களில், 87,000 குடும்பங்கள் கட்டணம் செலுத்தா
வவுனியா உட்பட நாடு முழுவதும் மூன்று நாட்கள் பயணத்தடை
மக்களின் ஜனநாயக உரிமைக்கு புறம்பாக அரசாங்கம் செயற்பட
கொழும்பில் இருந்து மூன்று லட்சம் லீற்றர் எரிபொருட்கள
கொடிய போரில் கொல்லப்பட்ட தமிழ் மக்களை நினைவுகூரும் மு
விஸ்கி அருந்திக்கொண்டு அமைச்சர்களுடன் கலந்துரையாடுவ
நாராஹென்பிட்டி அபயராம விகாராதிபதி முருத்தெட்டுவே ஆன
உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்தை உறுதி செய்வதற்
சீனாவின் சினோபார்ம் (sinopharm) கொவிட் 19 தடுப்பூசியின் 6 இலட்ச
காலி முகத்திடலில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் போர
தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கொடிகாமம
நாட்டில் தேங்காய் எண்ணெய்க்கும் வரிசையில் காத்திருக
ஹம்பாந்தோட்டை மிரிஜ்ஜவிலயில் ஏற்றுமதிக்கு பதப்படுத்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ராஜபக்ஷக்களின் ஆதரவுடன் ஆ