மியன்மாரில் சர்வதேச சட்டவிரோத கும்பலிடம் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை விடுவிக்க தூதரகம் மூலமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
முதற்கட்டமாக இந்தியத் தூதரகம் மூலமாக 30 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில் எஞ்சியுள்ள இந்தியர்களும் விரைவில் மீட்கப்படுவார்கள் என மத்திய வெளியுறவு இணை அமைச்சர் வி.முரளிதரன் உறுதியளித்துள்ளார்.
மியன்மார் நாட்டில் 50 தமிழர்கள் உட்பட 300 இந்தியர்கள் சர்வதேச சட்டவிரோத கும்பலிடம் சிக்கியிருப்பதாக தகவல் வெளியானது. வேலை வாயப்பு உறுதிமொழியுடன் அழைத்துச் செல்லப்பட்டு அவர்கள் சைபர் குற்றங்களில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அதனை மறுத்தவர்கள் சித்ரவதையும் செய்யப்பட்டுள்ளனர். இதில் 17 தமிழர்கள் தமிழக அரசுடன் தொடர்பு கொண்டு தங்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளனர். இதனைத் தொடர்ந்துஇ பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அவர்களை மீட்க வேண்டும் என்றும் பாதுகாப்பாக இந்தியா அழைத்து வர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதனடிப்படையில் இந்தியர்களை மீட்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதாக மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.
நடந்து முடிந்த தேர்தலில் வாக்காளர்களுக்கு பண பட்டுவா
தமிழக சட்டமன்ற வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது தேர
சென்னையில் முகக்கவசம் அணியும் பழக்கம் அதிகரித்துள்ள
சட்டமன்ற தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினருக
டெல்லியில் ரேசன் பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்கு
இந்திய காவல் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியக
எகிப்து சென்றுள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத
விவசாயிகளின் போராட்டத்தைத் தடுக்க டெல்லியில் தடுப்ப
தலைநகர் டெல்லியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்க
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் தமிழ
மத்திய சுகாதாரத்துறை மந்திரியை நேரில் சந்திக்க தமிழக
கோவை மாவட்டம் சரவணம்பட்டியை சேர்ந்தவர் பாரதிராஜா இவர
தே.மு.தி.க. தலைவர் கப்டன் விஜயகாந்த் தன்னுடைய கூட்டணி க
ஒன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்பவர்
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக நடைபெறும் வன்முறை சம்
