கொழும்பு 15 – முகத்துவாரம்இ கஜீமா தோட்டத்தில் பரவிய தீ விபத்தினால் இடம்பெயர்ந்துள்ள 300 பேருக்கு உடனடியாக நிவாரணம் வழங்கப்படும் என கொழும்பு மாவட்ட செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார்.
நேற்றிரவு 8 மணியளவில் இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கொழும்பு மாநகர தீயணைப்பு திணைக்களம் மற்றும் கடற்படையின் 10 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாக தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த தீ விபத்தினால் உயிர்ச்சேதமோ எவருக்கும் காயமோ ஏற்படவில்லை என்பதுடன் சுமார் 300 பேர் அளவில் இடம்பெயர்ந்துள்ளனர்.
இடம்பெயர்ந்தவர்கள் களனி நதீ விகாரை மற்றும் முவதொர உயன அடுக்குமாடி குடியிருப்பு சனசமூக மண்டபத்தில் தற்காலிக தங்கவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் கிராண்ட்பாஸ் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்தநிலையில் இந்த மக்களுக்கு நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வீடமைப்புத் தொகுதிகளில் இருந்து வீடுகளை வழங்குவதற்கான முன்மொழிவு இன்று மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பேலியகொட மீன் சந்தை இன்று முதல் மொத்த விற்பனைக்காக தி
36 ஆவது பொலிஸ் மா அதிபராக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிப
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பி
சப்ரகமுவ, மேல், தென், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் ச
மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பேச
சீனா தனது வல்லரசு போட்டிக்கான களமாக இலங்கையை பயன்படுத
எதிர்வரும் நாட்களில் நாட்டு மக்களுக்கு மூன்றாவது தடு
கொவிட் தொற்றுக்கு மத்தியில் பொது போக்குவரத்து சேவையை
நாட்டில் உள்ள அனைத்து பிரதான கட்சிகள் முதல் சிறுபான்ம
புகையிரத நிலைய அதிபர்கள் சில கோரிக்கைகளை முன்வைத்து ந
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பாரதிய ஜனதா கட்சியின
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் 'ஒன்றாக எழுவோம் – களு
இரண்டு நாள் உத்தியோகவூர்வ விஜயத்தை மேற்கொண்டு பங்களா
எதிர்வரும் தேர்தல்களில் புதிய கூட்டணியை அமைத்து, அதன்
நாடு பூராகவும் முழுமையான பயணத்தடை இன்று (14.05) முதல் அமுல