பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச உள்ளிட்ட சிலருக்கு எதிராக கறுவாத்தோட்டம் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (மார்ச் 13) விசாரணைக்கு எடுக்கப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் இளவரசர் செயிட் அல் ஹுசைன் இலங்கைக்கு விஜயம் செய்த போது கொழும்பு, தும்முல்லையில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வளாகத்தைச் சுற்றியுள்ள வீதிகளை மறித்து பொதுமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு இன்று காலை கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இவ்வழக்கில் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, வீரகுமார திஸாநாயக்க, பியசிறி திஸாநாயக்க, மொஹமட் முஸம்மில், ஜயந்த சமரவீர உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், வழக்கு விசாரணைக்கு ஆஜராகத் தவறியமைக்காக விமல் வீரவன்சவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
பசறை - கோனகெலே தோட்டத்தில் 18 வயதுடைய மகனை கத்தியால் வெட
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ஜோ பைட
நாடாளுமன்றத்தின் மாதாந்த மின் கட்டணம் 60 இலட்சம் ரூபாய
பொலன்னறுவை மாவட்டத்தின் எலஹர மற்றும் சருபிம ஆகிய கிரா
இலங்கையர்களின் இன்றைய நிலையில் உள்ளங்களில் பற்றி எரி
யாழ்ப்பாணம் – நல்லூர் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்
கட்டுநாயக்க விமான நிலையத்தின் பொருட்கள் ஏற்றுமதி மு
பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்டு மகசீன் ச
அரச நிறுவனங்களில் புதிய திட்டமொன்று நடைமுறைப்படுத்த
மயானமொன்றில் உயிரிழந்தவரின் இறுதிச்சடங்குகள் நடைபெற
இலங்கை சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்
நேற்றைய தினத்தில் (10) மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட்,
புதிய பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில்
70 சதவீத சம்பள உயர்வைக்கோரி இலங்கை தோட்ட சேவையாளர் சங்க
இந்த மாதத்தில் எந்த நேரத்திலும் எரிபொருள் தட்டுப்பாட