நியூசிலாந்தின் கெர்மாடெக் தீவு (Kermadec Islands) அருகே இன்று (16) காலை ரிக்டர் அளவுகோலில் 7.1 என்ற அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் அறிவிப்பின் படி, கடலுக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தாலும், 300 கிலோமீட்டர் சுற்றளவிற்கு மக்கள் யாரும் வசிக்காத இந்த தீவின் கரையோரப் பகுதிகளில் அபாயகரமான சுனாமி அலைகள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
நேற்று வெலிங்டன் அருகே 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்ட நிலையில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நியூசிலாந்து உலகின் இரண்டு முக்கிய டெக்டோனிக் தட்டுகளான பசுபிக் தட்டு மற்றும் ஆஸ்திரேலிய தட்டு ஆகியவற்றின் எல்லையில் அமைந்திருப்பதால், அடிக்கடி நிலநடுக்கங்களுக்கு ஆளாகிறது. இருப்பினும், நாடு முழுவதும் நிலநடுக்க அளவில் மாறுபாடு உள்ளது. Ring Of Fire என்று அழைக்கப்படும் தீவிர நில அதிர்வு நடவடிக்கையின் விளிம்பில் நியூசிலாந்து உள்ளதால், தீவிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான பூகம்பங்கள் ஏற்படுகின்றன.
கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் உருவான கொரோனா பாதிப்பு இன்ன
உடலுறவு என்பது ஆண், பெண் என இருபாலருக்கும் பொதுவான ஒன்
உக்ரைனுக்கு அமைதி காக்கும் படைகளை அனுப்பும் போலந்து ய
நாட்டில் கொரோனா 2-வது அலை தீவிரமாக பரவி வருகிறது.<
இஸ்ரேலில் கடந்த 2 வருடங்களில் 4 முறை நாடாளுமன்ற தேர்தல்
உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷியாவி
ஆப்கானிஸ்தானில் கடந்த சில தினங்களாக தலிபான்கள் தங்கள
நெருக்கடியில் உள்ள இலங்கையின் கடன் சுமையை குறைக்க சீன
உக்ரைனின் போரோடியங்கா நகரில் ரஷ்ய படைகள் நடத்திய தாக்
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறுவது
சண்டை நிறுத்தத்துக்கு பிறகு முதல் முறையாக காசா நகர் ம
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப். கடந
துபாய் நகரில் சம்மா மற்றும் மரியம் என்ற சகோதரிகள் வசி
உக்ரைன் தலைநகர் கீவ் நகர் முழுவதும் ஊரடங்கு நடைமுறை
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
