மித்தெனிய காரியமடித்த வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியருக்கு தாதி ஒருவர் கொடுத்த பாலை குடித்ததால், சுகவீனமடைந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மஹரகமவை வசிப்பிடமாகக் கொண்ட 53 வயதுடைய வைத்தியர் கடந்த 7ஆம் திகதி சுகவீனமடைந்து தங்காலை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த வைத்தியர் கடமையில் இருந்த போது தாதி ஒருவரினால் ஒரு கோப்பை பால் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அதனை அருந்திய வைத்தியர் தனது கடமைகளை முடித்துக் கொண்டு தனது விடுதிக்கு சென்றுள்ளார். மறுநாள் காலை வைத்தியசாலைக்கு வைத்தியர் வராததால் ஊழியர் ஒருவர் அவரை தேடி சென்றுள்ளார்.
இதன்போது வைத்தியரின் உடல்நிலை மோசமானதால் தங்காலை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைத்தியர் நச்சுப் பொருளை உட்கொண்டதன் காரணமாக நோய்வாய்ப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். எனினும் அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவர் தெரிவித்துள்ளார்.
வைத்தியரின் இரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், தென் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஹம்பாந்தோட்டை மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார்.
உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் அரச நிறுவனங்களை பரிச
இலங்கையை அண்மித்த பகுதிகளில் குறைந்த வளிமண்டலத் தாழ்
குளுக்கோமா நோயினால் கண் பார்வை இழக்கும் அபாயம் அதிகம்
இலங்கையின் பொருளாதாரம், சமீப சில ஆண்டுகளாக சிக்கலைச
நாடளாவிய ரீதியில் பொது முடக்க நிலை அறிவிக்கப்பட்டுள்
இந்த அரசாங்கத்தை விரட்டியடிக்கும் வகையில் மாவட்டங்க
இலங்கை மின்சாரசபையின் உயர் அதிகாரிகள் ஜனாதிபதி கோட்ட
கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின்
நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 750 மில்ல
உருத்திரபுரம் சிவன் கோவில் பகுதியில் அகழ்வாராய்ச்சி
குத்தகை தவணையை செலுத்த அடுத்த வருடம் மார்ச் மாதம் வரை
பாக்கு நீரிணையில் தொடரும் மீனவர் பிரச்சினை இலங்கை-இந்
இலங்கையில் கையிருப்பில் உள்ள பைசர் தடுப்பூசிகள் எதிர
இலங்கையில் செயற்படும் இந்திய எரிபொருள் நிறுவனமான “இ
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பள உயர்வை