வவுனியா - செட்டிகுளம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த புத்தரை காணவில்லை என அப் பகுதியில் தற்போது வசித்து வரும் தமிழர் ஒருவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
வவுனியா - செட்டிகுளம், பழைய புகையிரத நிலையத்திற்கு முன்பாக நேற்று (09) புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டிருந்தது. அது நேற்று (09) மாலையே அகற்றப்பட்டிருந்ததுடன் அப்பகுதியை சேர்ந்த ஒருவர் வைத்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்றைய தினம் (10) குறித்த நபர் தானே தனது காணியில் புத்தர் சிலையை வைத்ததாகவும், அதனை காணவில்லை எனவும் செட்டிகுளம் பொலிஸில் முறையிட்டுள்ளார்.
குறித்த நபர் கடந்த 2022ஆம் ஆண்டு காலப்பகுதியில் நோர்வேயில் இருந்து இலங்கைக்கு வருகை தந்து நொச்சியாகம பகுதியைச் சேர்ந்த பெரும்பான்மையின பெண் ஒருவரை திருமணம் செய்திருந்ததுடன், கடந்த பெப்ரவரி மாதமளவில் செட்டிகுளத்திற்கு வந்து தங்கியுள்ளார்.
இந்நிலையிலேயே குறித்த புத்தர் சிலையை அவர் தனது காணிக்கு முன்னால் உள்ள அரச காணியில் வைத்துள்ளார்.
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் செட்டிகுளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் வயோதிப பெண் ஒருவர்
கொரோனா தொற்றாளர்களாக மேலும் 348 பேர் சற்று முன்னர் அடைய
நல்லூர் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் கொடியேற்றத்துடன்
நாட்டின் 09 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாய
பொருளாதார ஸ்திரப்படுத்தல் தொடர்பான குறுகிய மற்றும் ந
பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், சிம்
அரசாங்கம் முகங்கொடுத்துள்ள பாரிய நிதி நெருக்கடியின்
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் பஸில் ர
ஜனாதிபதி கோட்டாபய தலைமையில் ஆளும் கட்சியின் நாடாளுமன
வவுனியாவில் மேலும் 16பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்
வவுனியா வடக்கு, சின்னடம்பன் பகுதியில் நேற்று மாலை (10) யா
நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின
தமிழீழ விடுதலைப் புலி முன்னாள் உறுப்பினர் ஒருவருக்கு
தேசிய சபையை அமைப்பதற்கான தீர்மானத்தின் மீதான விவாதம்
கொழும்பிலுள்ள எரிபொருள் நிலையமொன்றில் பதற்ற நிலை ஏற்